அவளும் அதுவும்
சமீபத்தில் என் நண்பர் கெளதம் பிகாஸா வெப்-பில் அவர் க்ளிக்கிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். முன்பே ஒரு பதிவில் நான் எழுதியிருந்ததுபோல கெளதமுக்கு பறப்பன, ஊர்வன பற்றிய ஆராய்ச்சியிலும் அது சம்பந்தமான புகைப்படங்களிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆக அவர் எடுக்கிற பெரும்பாலான புகைப்படங்கள் புழு, பூச்சி அல்லது பறவைகளாகவே இருக்கும். அந்த மாதிரி ஒரு ஆல்பத்தைத்தான் அவர் எனக்கு அனுப்பியிருந்தது. அதில் ஒரு ஈ-யின் புகைப்படத்தைப் பார்த்ததும் திடீரென எனது கோக்குமாக்கான கிரியேட்டிவிட்டி நியூரான்கள் உயிர்கொள்ள சமீபத்தில் பார்த்த ‘அவதார்’ படத்தின் காட்சியொன்று ஃப்ளாஷ் அடித்தது. எங்கிருந்தோ குதித்து ஒரு பாறையின் மீது பொசிஷன் எடுக்கிற பேண்டோரா கிரகவாசியான நெயித்திரி (Neytiri) (அல்லது சாம் வொர்த்திங்டன் அழைப்பது போல நேத்தீர்ரி) -யின் ஒரு ஸ்டில் ஞாபகத்திற்கு வந்தது. தேடியபோது கூகிளில் கிடைத்தது.
படத்தில் இந்த நெயித்திரி கேரக்டரை உற்று கவனித்திருப்பீர்களேயானால் (நிச்சயம் கவனித்திருப்பீர்கள் ) அவளின் அசைவுகள், நிற்பது நடப்பது எல்லாமே ஒரு பூனை அல்லது அதே போன்றதொரு விலங்கினையொத்ததாக இருப்பதைக் காணலாம். சீறுவதும் கூட. இரண்டாம், மூன்றாம் தடவை பார்க்கும்போது படத்தில் நெயித்திரியானவள் ஓவர் சீன் போடுகிறாளோ என்று தோன்றினாலும் அவள் மக்கள் உள்ளத்தை கொள்ளைகொண்ட அருமையான பாத்திரப் படைப்பு என்பதை மறுப்பதற்கில்லை.
கெளதமின் அருமையான புகைப்படத்திற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதுபோல என் கற்பனைக்குத் தோன்றியது. உங்களுக்கு எப்படித் தெரிகிறது பாருங்களேன்.



ஸ்ரீதர்பாபு 1:02 பிற்பகல் on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
ரூம் போட்டு யோசிப்பீங்களோ? சுவாரஸ்யமான பொருத்தம்தான்.
பொன்.சுதா 1:02 பிற்பகல் on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
ஆமாங்க .. அப்படியே தான் இருக்கு. ஆனா தனியா பூச்சியின் புகைப்படத்தை மட்டும் பார்த்திருந்தால் எனக்குத் தோணி இருக்காது … அபாரம் ரகு..
டைனோ 3:49 பிற்பகல் on ஜனவரி 12, 2010 நிரந்தர பந்தம் |
பெரும்பான்மையான காமிக் ஹீரோக்கள் எதாவது விலங்கின் அடிப்படையிலேயே இருப்பார்கள்.
சந்துரூ 6:31 மு.பகல் on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
‘ஈ’து புதுசு!
Gowtham 7:50 மு.பகல் on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
interesting observation Raghu
சித்ரன் 7:52 மு.பகல் on ஜனவரி 29, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பொன்சுதா, டைனோ, சந்துரூ, கெளதம்.