பார்த்துத் தொலைப்போம்!!
அக்டோபர் 7, 2007
விஜய் டிவியின் ஜோடி நெ.1 நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவரான சிம்புவின் நேரடி அதிரடித் தீர்ப்பின் தீர்க்கத்தை தாங்க மாளாத நடிகர் பப்லு என்கிற பிருத்வி தன் உணர்ச்சிப் பிழம்பின் சீற்றத்தை சிம்புவின் மேல் திருப்பி அனுப்ப, நிகழ்ச்சி ரசாபாசமாகி சிம்பு ‘இந்த நிகழ்ச்சியிலிருந்து eliminate ஆவது நான்தான்’ என்று தானே அறிவித்துக் கொண்டு கேமரா, ட்ராலி, செட்களைத் தாண்டி வெளியேற, போட்டியில் கலந்து கொண்டவர்கள் வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க, சிம்பு காரில் ஏறும்முன் மடக்கி, கெஞ்சி மறுபடியும் கொண்டுவந்து நடுவர் இருக்கையில் அமர வைத்தார்கள். மேலும் தொடர்ந்த சிம்புவின் emotional burst-out அழுகை இன்னபிற காரணங்களால் பிருத்விராஜ் போட்டியிலிருந்து வெளியேற, இத்தனையையும் லைவ் ரிலே என்ற பெயரில் போட்டுக் காட்டி டி.வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பெரிய திரையில் K. பாலசந்தர் கையால் எல்லாம் குட்டுப்பட்ட நடிகர் பப்லு என்கிற பிருத்வி சின்னத்திரையில் இப்படி சிம்புவிடம் சிலுப்பிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது என்கிற கேள்வியை பார்க்கிறவர்கள் கேட்கிறார்கள்தான். அதை விடுங்கள்!
இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage-ல் இருக்கவேண்டிய நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது.
ரொம்ப கஷ்டம்தான்! ஆனாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.



அக்டோபர் 7, 2007 at 9:17 மு.பகல்
yes, vijay tv does it a last. it makes money out of people emotions.
bad example set by vijay tv.
lot of issues in this Jodi number I session II
அக்டோபர் 7, 2007 at 9:34 மு.பகல்
மற்ற நடுவர்கள் பாராட்டி மதிப்பெண் வழங்கிய நிலையில் சிம்புவின் கமெண்ட்களை பப்லு இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லைதான். என்றாலும், solo round இல் இருந்தே சிம்புவின் கமெண்ட்கள் பப்லுவை மட்டம் தட்டும் வகையில் இருப்பதை உணர முடிகிறது. பப்லு
உண்மையிலேயே நன்றாக ஆடினார் என்பதில் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் யாருக்கும் இருவேறு அபிப்ராயம் இருக்க முடியாது. பேச விரும்பவில்லை என்று நின்றவரை வீண் வம்புக்கு இழுத்து ரசாபாசமாக்கி வெளியேற்றியது வரை எல்லாம் சிம்புவின் கைவண்ணம்.
ஒவ்வொரு ஜோடியும் ஆடி முடித்ததும் அவர்களை டென்ஷன் ஆக்குகிறேன் பேர்வழி என்று சிம்பு அடிக்கும் கொட்டம்; ஒரு ஜோடியிடம் இன்னொரு ஜோடி பற்றி கருத்து கேட்டு சங்கடப்படுத்தி ரசிக்கும் மனோபாவம் – எல்லாமே சிறுபிள்ளைத்தனம்.
–”இப்பொதெல்லாம், வித்தியாசப் படுத்துகிறோம் என்கிற பெயரில், நிகழ்ச்சியின் இடையில் இம்மாதிரி behind the stage நிகழ்ச்சிகளையும் ஒரு செட்டப்பாகவோ, அல்லது நிஜத்தில் நடந்ததாகவோ காட்டி பார்வையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதை டி.வி சேனல்களில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறிக் கொண்டிருப்பதை அவ்வப்போது கண்ணுற முடிகிறது” –
நிஜம்.
அக்டோபர் 7, 2007 at 10:45 மு.பகல்
ராமு, ராஜா,
நீங்கள் சொல்வது சரியே. ‘எனக்குப் பிடிக்கல’ என்று முகத்தில் அடித்தார்போல் தீர்ப்பு சொல்வதேகூட ஒரு நல்ல நடுவருக்கு அழகில்லை. நாகரிகமும் இல்லை என்பது என் கருத்து. அப்படிச் சொல்வது ஒரு Audience attitude என்றே கருதுகிறேன். சிம்பு அதைத்தான் செய்கிறார்.
அக்டோபர் 7, 2007 at 10:46 மு.பகல்
பல வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவரையும், சிவஷங்கர் பாபாவையும் வைத்து ஏதோ ஒரு டிவியில் இந்த மாதிரி ட்ரையல் பார்த்தார்கள் என்று நினைக்கிறேன்.
அக்டோபர் 7, 2007 at 10:50 மு.பகல்
சத்யராஜ்குமார்.. எங்கேயோ போயிட்டீங்க..!
அக்டோபர் 7, 2007 at 10:51 மு.பகல்
ithu ellam pre-planned thaan… since too many channels showing the same kind of dance show, seems vijay tv is making some gimmicks…
அக்டோபர் 7, 2007 at 11:16 மு.பகல்
எல்லாமே செட்டப் மாதிரிதான் எனக்குத் தோணுச்சு
அக்டோபர் 7, 2007 at 11:21 மு.பகல்
எந்த மாதிரி ஆடியன்ஸ் வேணும் என்று எண்ணுவதில்தான் இருக்கிறது.
ஷில்பா ஷெட்டி கலந்து கொண்ட பிக் பிரதர், அமெரிக்க எம்.டிவியின் நிஜ நாடகங்களில், இந்த ‘ரியாலிடி’யை சிறப்பாகவே அரங்கேற்றுகிறார்கள். பதின்ம வயதினரையும் கட்டிப்போட்டு பார்க்க வைக்கிறது.
சன்/விஜய்- கள் இன்னும் இந்த ஒத்திகை பார்க்கப்பட ‘அதிரடி நிஜ’ நிகழ்வுகளை எடிட் செய்வதில் தேறவில்லை. சினிமா வெளியாகும் முன் எஸ்.ஜே சூர்யாவிற்கும் மீரா ஜாஸ்மினுக்கும் திருமணம் போன்ற வதந்திகளைக் கிளப்பி விருவது போல், டிவி கிசுகிசுக்களில் ப்ரொஃபஷனலிஸம் போதவில்லை.
அக்டோபர் 7, 2007 at 11:22 மு.பகல்
பப்லுவை திரையுலகில் ஒரு தாயின் சபதம் படத்தில் டான்சராக அறிமுகம் செய்து வைத்தவர் டி ராஜேந்தர்.
முன்று நடுவர்கள் இருந்தால் எல்லோருமே ஒரே கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. சிம்பு வெளிப்படையாக பேசி இருக்கக் கூடாது என்று தான் பலரும் சொல்கிறார்கள். சிம்பு பாயிண்டும் சரியாக இருக்கும் முந்தய நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து வாழ்த்தி இருக்கிறார் என்பதையும் கவனம் கொள்ள வேண்டி இருக்கிறது.
அக்டோபர் 7, 2007 at 11:25 மு.பகல்
இருக்கலாம் பிரகாஷ்,
இந்த நிகழ்வு ஒன்றை மட்டுமே இந்த தொடருக்கான விளம்பரங்களில் ஒரு வாரமாய் காட்டி காட்டி நிகழ்ச்சி அன்று நிறைய viewership-ஐ ஈட்டிக்கொண்டார்கள்.