Updates from நவம்பர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • பூச்சாண்டி நண்பன் 

    மீனாட்சி சுந்தரம் 10:08 am on November 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

    வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

    ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

    தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

    போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

    LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

    பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

    டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

    முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

    காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

    -மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம் 

    சரசுராம் 12:44 pm on November 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: bachelor, cats

    bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

    என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

    விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

    நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

    பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

    -சரசுராம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • ஒரே நாளில் இரண்டு லட்சம் 

    மீனாட்சி சுந்தரம் 11:10 pm on October 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    தீபாவளிக்கு ரெண்டுநாள் முன்பு மாலை டிவியில் சேனல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு செய்திச் சானலை cross செய்ய நேர்ந்தது.

    சாலையில் டிவி செய்தி நிருபரின் மைக்கில் அந்த common man “ ஆமா சார்… என்ன சார் பண்ணுறது? இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சு. அன்னைக்கு இல்லாட்டி என்ன? அடுத்த நாள் பார்த்துக்கிட வேண்டியது தான்..” என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
    MeatShop
    தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர் பேசியதைக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள … ரிமோட்டில் வால்யூம் அதிகம் செய்தேன்.

    அடுத்து ஒரு கோவில் புரோகிதர் அதே மைக்கில் “ பொதுவாவே சனிக்கிழமை விசேஷமானது தான். அதுல புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷம். அதுலயும் ரொம்ப முக்கியம் புரட்டாசியின் கடைசி சனி. அன்னிக்கு பகவானை கும்பிட்டா ஒரு வருஷம் கும்பிட்ட பலன், கும்பிட்டவாளுக்கு” என்றார்.

    புரட்டாசி கடைசி சனி, சாமிகளின் ஜம்போ பேக் போல.

    அடுத்து ஒரு கறிக்கடைக்காரர். “ஆமா சார். இந்த வருஷம் கடைசி சனியில தீபாவளி வருது. அதுனால வியாபாரம் கொஞ்சம் டல்தான். போன வருஷம் சென்னையில மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள் வெட்டுனம். இந்த வருஷம் அஞ்சு, ஆறாயிரம் போனா அதிகம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மறுவியாபாரத்துல கொஞ்சம் நடக்கும்னு நம்புறோம்.” என்றார்.

    வீட்டில் அனைவரும் சைவம். நான் அசைவம் சாப்பிடுவேன்…எப்பவாவது. என்றாலும் ஒரு நாளில் ரெண்டு லட்சம் ஆடுகள் என்றதும் திக்கென்றிருந்தது. கவனிக்கவும்! இது ஆடுகளின் கணக்கு மட்டும்.

    எனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை.

    புகையிலை, புகையிலைப் பொருள்கள் கேடு என்று சொல்லும் அரசு புகையிலை பயிரிடுவதைத் தடுப்பதே இல்லை.

    குடித்தால் கேடு என்னும் அரசே அதை விற்பனை செய்கிறது.

    குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஆனால் பார் இருக்கும். அதில் வண்டி நிறுத்தமும் இருக்கும்.

    வாகனங்களில் ஏர் ஹார்ன் தடை செய்யப் பட்டது. அதன் உற்பத்தி தடை செய்யப்படவில்லை. எனில் உற்பத்தியாகும் ஏர் ஹார்னை யார் உபயோகிக்கிறார்கள்?

    அளவிடும் மீட்டர் டேப்புகள் மொத்தமும் அரசாங்க முத்திரை வாங்கி வருவதில்லை.

    அதே போலத் தான்…

    சினிமாவில் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாயோ, குரங்கோ நடிப்பதை சித்ரவதை என்று மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் ப்ளூகிராஸ் இருக்கும் ஊரில் தான் இத்தனை மட்டன் கடைகள். பிரியாணி ஹோட்டல்கள்.

    யோசித்துப் பார்த்தால் குலை நடுங்குகிறது.

    ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள்.

    போதுமடா அசைவம்.

    - மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • kuttysamy 1:42 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ரசித்தேன் …தீபாவளி வாழ்த்துக்கள்

    • REKHA RAGHAVAN 1:47 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சிந்திக்கவேண்டிய விஷயம். அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

    • Vivek 11:17 மு.பகல் on அக்டோபர் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கறிக்கடையில் , இறைச்சி வாங்கும் போது கூட இது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழம்பு கொதிக்கும் போது, கூடவே அந்த உணர்வும் கொதித்து ஆவியாகிவிடும். கறி சாப்பிடுவது மட்டுமே மிருகவதையா ? நம்ம அன்றாட வாழ்க்கைல எத்தனையோ இருக்கே! நாம் உபயோகிக்கும் செருப்பு, ஷு, பர்ஸ், பெல்ட், பை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வேளை அது செத்துப்போன மிருகத்தின் தோல் என்பதால் அதை வெஜிடேரியன் மக்களும் ஏற்றுக்கொள்கிறார்களோ ?

      • மீன்ஸ் 9:52 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        300 வருசத்துக்கு ஒரு முறை தான் இப்படி வருமாம்.
        அப்படியாவது இரண்டு லக்‌ஷம் உயிரை காப்பாத்தியிருக்கார்னா கடவுள் இருக்கார் தானா?

    • Karthikeyan A 11:20 மு.பகல் on அக்டோபர் 23, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பேசாமல் தேசிய விலங்காக அறிவித்துவிட்டால் எப்படியிருக்கும்? பாருங்கள், இனிமேல் டால்பின்களை கொல்லமாட்டார்கள்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்