Updates from செப்டம்பர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2 

    சத்யராஜ்குமார் 8:31 pm on September 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    சாவி, இதயம் போன்ற பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த சமயம். நான் கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த என் உறவினர் ஒருவர் நான் கதைகள் எழுதுவதை அறிந்து, ‘உங்களுக்கு பூங்கோதை தெரியுமா?’ என்று கேட்டார். பத்திரிகையாளர். சிறுகதைகள், புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி குடும்ப நல ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்ததுண்டு.

    ‘தெரியும்.’

    ‘அவரை சந்திச்சுப் பேச இஷ்டமிருந்தா சொல்லுங்க.’ என்றார்.

    ஒரு மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் சாயிபாபா காலனியிலிருந்த பூங்கோதையின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவரை முன்னமே ஓரிரு சந்தர்ப்பங்களில் பிற இடங்களில் பார்த்திருந்தாலும், அந்த பத்தொன்பது வயதில் ஒரு எழுத்தாளனாக, எனக்கென்ற ஒரு தனி அடையாளத்தோடு போய் சந்திப்பது கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

    கம்பீரமான குரலில் பேசுவார். பேச்சில் தன்னம்பிக்கை இருக்கும். இன்ட்டெலக்ச்சுவல் தோற்றம்.

    அந்த சமயத்தில் எப்போதும் என் கையில் ஒரு புதிய சிறுகதை இருக்கும். படித்து அபிப்ராயம் சொல்வதற்காக அவரிடம் கொடுத்தேன். சிறுகதையை வாசித்து முடித்தவர், ”சிறுகதையின் வெற்றி படிச்சு முடிச்சவுடன் அது தரும் இம்ப்பாக்ட்டில் இருக்கு. இந்தக் கதையின் samsமுடிவில் இன்னும் கொஞ்சம் இம்பாக்ட் இருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்றார். இதைத் தவிர சிறுகதையின் முக்கிய திருப்பமாக ஒரு கதாபாத்திரம் இறந்து போவதற்கு வலுவான காரணங்களை கதையின் முன் பகுதியில் நான் குறிப்பிடாததையும் சுட்டிக் காட்டினார். அதுகாறும் பிரசுரமாகியிருந்த நாலைந்து சிறுகதைகளை எழுதிய போது அது தரும் தாக்கத்தைப் பற்றியோ, சம்பவங்கள் குறித்த தர்க்கத்தைப் பற்றியோ நான் யோசித்ததில்லை.

    அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் பிரசுரமான கதைகளையும், பிரசுரமாகாமல் திரும்பி வந்த கதைகளையும் படித்துப் பார்த்தேன். பிரசுரமான கதைகளில் இயல்பாகவே லாஜிக் சரியாக இருந்தது. கதையில் நல்ல இம்பாக்ட் இருந்தது. பிரசுரிக்க இயலாத கதைகளில் இயல்புத்தன்மை இல்லை. அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கரு இல்லை.

    பூங்கோதையின் ஆலோசனைகளுக்கேற்ப கதையை மாற்றி எழுதிய பின், திரு வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் வார இதழில் அக்கதை பிரசுரமானது. அதற்கப்புறம் பல வருஷங்களுக்குப் பின் குமுதம் நடத்திய மாவட்ட சிறுகதைப் போட்டி வளாகத்தில் எழுதுபவர் மத்தியில் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்தித்தேன். போட்டியில் பங்கு பெற வந்திருந்த லேகா ரத்னகுமார் உள்ளிட்ட அவர் தோழிகள் சிலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த சந்திப்புகளில் என்ன சர்ப்ரைஸ்? அது இனிமேல்தான் வருகிறது. இங்கே அமெரிக்காவில் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஸாம்ஸ் க்ளப் என்னும் மொத்த அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது என் எதிரே ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு வந்தார் பூங்கோதை.

    அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நானே அவர் முன்னால் போய் நின்று, ”நீங்க பூங்கோதைதானே?” என்றேன். கடைத் தெருவில் தெரிந்தவர்களை எதேச்சையாய்ப் பார்ப்பது நம் ஊரில் அதிசயமில்லை. ஆனால் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!

    அதற்கப்புறம் பேமிலி கெட்-டு-கெதர்களில் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். பத்திரிகைகளுடனான தொடர்புகள் தற்சமயம் முற்றிலுமாக இல்லை என்றார். என்னைப் போலவே!

    - சத்யராஜ்குமார்


    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1


     
    • REKHA RAGHAVAN 1:30 மு.பகல் on செப்டம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!//
      உண்மைதான். அடிக்கடி சந்திப்பதை விட சிறிது இடைவெளியில் நண்பர்களை சந்திப்பதில் உள்ள கிக் இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

  • நீ மேகம் ஆனால் என்ன? 

    கனகராஜன் 9:27 pm on September 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    அபபோது எனக்கு என்ன வயது என்று தெரியாது

    கனகராஜன் ஆர்ப்பாட்டமில்லாத எழுத்துக்கு சொந்தக்காரர். அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் இந்த ஆண்டு இரண்டாம் பரிசுக்குரிய கதை எழுதியிருக்கிறார். ஏற்கெனவே சில வருஷங்களுக்கு முன்பு முதல் பரிசு வாங்கியுள்ளார். 90-களின் மத்தியில் நானும் இவரும் சத்யராஜ்-கனகராஜ் என்ற பெயரில் இணைந்து எழுதிய குறுநாவல் ஒன்று கலைமகளில் பரிசு பெற்றிருக்கிறது. இந்தப் பதிவில் துவங்கி இவரும் ‘இன்று – Today’ எழுத்தாளராகிறார்.
    – சத்யராஜ்குமார்

    ஆனால் ஒண்ணாம் வகுப்புகூட சேரவில்லை. சமத்தூர் அரண்மனை வீதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். தினமும் சாயங்காலம் ஆனால் ஓலை கொட்டகையில் பாட்டு வைப்பார்கள். ஒரு நான்கு பாடல்கள். அதற்குப் பின்னால் உள்ளே ரிக்கார்டு போட்டு விட்டார்கள் என்று அவசர அவசரமாக சினிமாவுக்கு ஓடுவார்கள். எங்கள் வீட்டில் எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப்போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் மட்டுமே தெரியும். ஒரு நாள் ஏதோ ஷூட்டிங் எடுப்பதாகச் சொன்னார்கள்
    mgr
    படத்தின் பேர் தாயில்லாக் குழந்தை. விஜயகுமார் கதாநாயகன். கதாநாயகி ஜெயசித்ரா. அரண்மனை வீதி கூட்டத்தில் நிறைந்தது. மாட்டு வண்டி ரேஸ் காட்சிக்காக நிறைய மாட்டு வண்டிகள் வந்திருந்தன.

    வரிசையாக மாட்டு வண்டிகள் நிற்க ஒரு ஆள் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். திருவிழாக் கூட்டம் போல மக்கள் இரண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். நான் கால்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருத்தர் இரக்கப்பட்டு எனக்கு வழி விட நான் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தேன். அடுத்த நாள் மாட்டு வண்டிகள் ஒவ்வொன்றாக ஓடின. மற்றொருநாள் வரிசையாக கார்கள் வந்தன

    ஒரு காரில் ஜெயசித்ரா வந்தார். கலர் பொம்மை மாதிரி எனக்குத் தெரிந்தார். விஜயகுமாரைப் பார்க்க முடியவில்லை. நான் காமிராவைப் பார்த்தேன். அந்தப் படம் ஒரு நாள் எங்கள் ஊர் ஓலைக் கொட்டகைக்கு வந்தது.

    எல்லாரும் ஓடிஓடிப் பார்த்தார்கள். நான் பள்ளிக்கூடம் போகத் துவங்கியிருந்த சமயம். எங்கள் வீட்டில் அழைத்துப் போகவில்லை. வகுப்பில் அந்தப் படத்‍தைப் பற்றி எல்லாரும் பேசிக் கொண்டார்கள். நான் வீட்டில் சினிமாவுக்கு கூட்டிப் போகச் சொன்னேன். அப்பா அனுமதிக்கவில்லை. படத்தில் நாங்கள் குடியிருந்த வீடெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு அதைப் பர்க்க ஆசையாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தப் படம் கருப்பு வெள்ளையா? ஈஸ்ட்மெண்ட் கலரா என்றுகூடத் தெரியாது. ஆனால் ஒரு பாட்டு மட்டும் நினைவில் இருக்கிறது. நீ மேகம் ஆனால் என்ன? நான் தோகை ஆன பின்னே… எப்போதாவது டிவியில் போடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    - கனகராஜன்

     
    • சித்ரன் 11:31 பிற்பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கனகு, சுத்தமாய் விவரம் தெரியாத குட்டிப் பையனாய் இருந்தபோது அப்பா அம்மாவுடன் டெண்ட் கொட்டகையில் நிறைய படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படங்களின் தலைப்புகள் ஒரு சில தெள்ளத்தெளிவாய் ஞாபகம் இருக்கின்றன. அவள் ஒரு தொடர்கதை, தாலியா சலங்கையா, மயங்குகிறாள் ஒரு மாது, தீபம் அவைகளில் சில. ஆனால் கதையோ நடிகர்களோ சுத்தமாய் நினைவில்லை.

      சித்ரன்
      http://chithran.com

    • REKHA RAGHAVAN 11:56 பிற்பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். சின்ன வயசில் நடந்த சம்பவங்களை அசை போடுவதில் எல்லோருக்கும் ஒரு அலாதி பிரியம்தான் (என்னையும் சேர்த்து).

      ரேகா ராகவன்.

  • மணியின் மரணம் 

    சரசுராம் 6:35 pm on September 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    மணி இறந்து விட்டதாக காலை என்னை எழுப்பியது. விபத்தில் இறந்து விட்டானாம். அவன் இத்தோடு நான்காவது தடவை இறந்து போகிறான். இந்த முறை உண்மையாக. மணி. முழுப்பெயர் மணிமாறன். நல்ல உயரம். நல்ல நிறம். அழகான மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. மனைவியும் ஏதோவொரு வேலை பார்க்கிறார்கள். மணியிடம் சரளமாய் வெளிப்படும் ஆங்கிலம் ஆச்சர்யப்படுத்தும். ஒரு பிரபல வங்கியில் பணி. ஆனால் அடிக்கடி எல்லோரிடமும் அவன்தான் கடன் கேட்பான். பொழுதுபோக்கு குடிப்பது. மேலும் போரடித்தால் விழுவது. எப்பொழுதாவது என்னை வழியில் நிறுத்தி பேசுவான். நான் சினிமாவில் வேலை பார்ப்பதால் பேச்சுக்கள் அது குறித்து தொடங்கி பிறகு அவன் எதற்காக நிறுத்தினானோ அதில் வந்து முடியும்.
    mani
    “என்ன ஸார் ஒரு கட்டிங்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா..” என்பான்.

    “நிச்சயமா.. எனக்குத் தெரிஞ்ச நண்பந்தான் பக்கத்தில சலூன் வச்சிருக்கான்.. வாங்க போலாம்..” என்பேன்.

    “அட போங்க ஸார்.. “ என்று சிரித்தபடி நகர்ந்து போவான்.

    மணியின் மகள் சமீபத்தில் பெரிய மனுஷியாக இனிமேல் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ள வீட்டில் விவாதம் நடந்ததாம். மணி உறுதியாக தலையசைத்தாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்தது. உடனே ஒரு சாமிக்கு வேண்டி கழுத்தில் மாலையுடன் அவனை பார்க்க முடிந்தது. பேச்சில் இன்னும் மரியாதையும் அன்பும் தெரிந்தது. அதற்கெல்லாம் ஆயுள் அற்பநாட்கள்தான். அதற்கு பிறகு ஒரு வாரத்திலேயே குடித்த நிலையிலேயே இருந்தான். நான் சிரித்தபடி அவனை பார்த்தேன். அவன் கழுத்தில் அந்த மாலை இல்லை. அவன் வழக்கம் போல் என்னிடம் நின்று பேசிவிட்டு நகர்ந்தான்.

    இதுதான் மணி. அடிக்கடி எங்காவது குடித்துவிட்டு விழுந்து விட்டதாக தகவல் வரும். இறந்து விட்டதாகவும் பேசிக்கொள்வார்கள். அவனது அம்மாவும் மனைவியும் தலைதெறிக்க ஓடுவார்கள். அவனது குழந்தையும் அழுதபடி ஓடிப்போய் கேட் அருகே நின்று அவர்கள் வரும்வரை நின்று அழும். ஒரு ஆட்டோவில் போட்டு மணியை தூக்கி வருவார்கள். உயிர் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நினைவு தப்பியிருப்பான். அவனது கனத்த உடம்பை இறக்கமுடியாமல் உதவிக்கு ஆள் கூப்பிடுவார்கள். நானும் போய் இருக்கிறேன். இந்த அனுபவங்கள் அடிக்கடி நடக்க எல்லோருக்கும் பழகிவிட்டது. இவனுக்கான விஷயங்களை அனைவரும் பதட்டமின்றி பார்த்தோம். ஒரு முறை கீழே விழுந்து மரண தருவாயில் ஆஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு காப்பாற்றப்பட்டான். செய்த ஆபரேசனில் உடம்பெங்கும் பிளேட்டுகள் வைக்கப்பட்டது. இரும்பு கடையில இவனை விலைக்கு போட்ட நல்ல காசு கிடைக்கும் என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு பிளேட்டுகள். பல லட்சம் செலவானது. பிழைத்து வந்த போது அவன் நடை முற்றிலும் மாறி இருந்தது. அடிபட்ட தழும்புகளில் முகம் லட்சணம் போயிருந்தது. அவன் பேச்சிலும் தெளிவில்லை. இனி ஆளே மாறி விடுவான் என்று நானும் உறுதியாய் நம்பினேன்.

    அதற்கு பிறகு அவர்கள் இருந்த வீடு ராசி இல்லையேன வேறு வீடு மாறி போனார்கள். ஆனால் அவன் மாறவில்லை. குடித்து கண்கள் சிவந்த நிலையில் அவனை மீண்டும் பார்த்தேன். எல்லாம் அடிபட்டால் திருந்துவிடுவார்கள் என்பார்கள். பல முறை அடிபட்டும் அவன் திருந்தவில்லை. திருந்துகிற அளவிற்கு அவன் அடிபடவில்லையோ என்று எனக்கு தோன்றியது. நான் பேசவில்லை. பேச பிடிக்கவில்லை. நகர்ந்து போனேன். அவன் மனைவி கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு போனார்களாம். அவர்கள் வீட்டில் அதைவிட பிரச்சனை போலும் உடனே திரும்பி வந்துவிட்டார்கள். எல்லாம் செய்தியாய் கேட்டுக்கொண்டேன்.

    சில நாட்களுக்கு பிறகு மணி இறந்து விட்டதாக செய்தி என்னை எழுப்பியது. அதுவும் நேற்று இரவு மழை நேரத்தில் ராயப்பேட்டை ஆஸ்பிடல் அருகில் ஒரு கவர்மெண்ட் பஸ்ஸில் அடிபட்டும் அவன் பிழைக்கவில்லை. இறந்து விட்டானாம். எனக்கு வழக்கம் போல் எந்த பதற்றமும் இல்லை. அவனை பற்றிய மோசமான நினைவுகள் மட்டும் என்னை மீறி வந்து போனது. என்ன சொல்வது?

    குடிப்பது மட்டுமே வாழ்க்கையாய் இருந்து பல முறை அடிப்பட்டு திருந்தாமல் மீண்டும் அதே நிலையில் பஸ்ஸில் அடிப்பட்டு இறந்ததை எப்படி விபத்தென்று சொல்ல முடியும்? என்னை பொறுத்தவரையில் மணி செய்துக்கொண்டது தற்கொலை.!

    - சரசுராம்

     
    • என். சொக்கன் 12:36 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சரசுராம் – குறிப்பாக அந்தக் கடைசி வரி!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • சித்ரன் 4:00 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //செய்த ஆபரேசனில் உடம்பெங்கும் பிளேட்டுகள் வைக்கப்பட்டது. இரும்பு கடையில இவனை விலைக்கு போட்ட நல்ல காசு கிடைக்கும் என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு பிளேட்டுகள்.//
      :-)

    • கவிதா 6:36 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பாசிட்டிவ்வான உங்கள் கதைகளைப் படித்து விட்டு இப்படி ஒரு எதிர்மறை பதிவைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது கதை அல்ல; நிஜம் என்பது புரிகிறது.

    • REKHA RAGHAVAN 7:09 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதே நிலை என் எழுத்தாளர் நண்பருக்கும் ஏற்பட்டது. அனால் அவர் விபத்தை சந்திக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து போய் மரணத்தை தழுவினார். அவருடைய மனைவி ” அண்ணா நீங்களாவது சொல்லி திருத்தக்கூடாதா?” என்று ஒரு முறை கேட்டது இன்னும் என் மனதிலிருந்து நீங்காமல் உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்பது நிஜம்.

      ரேகா ராகவன்.

      • சரசுராம் 8:37 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி ரேகா ராகவன். என்ன செய்வது ஞானோதயங்கள் அதிகபட்சம், பாதித்தவர்களை விட பார்வையாளனுக்கே அதிகம் கிடைக்கிறது.

    • SUBHASHREE 3:29 பிற்பகல் on செப்டம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      too good..and touching..i can understand in mani’s house what they have undergone with mani..because..i have seen how people behave when they are drunk..and how it disturbs their family especially small childern and old parents..its pathetic…hmm…its individual’s decision to come out of it and stick to right path..THEEDUM NANDRUM PERAR THARA VAARAA…how true..

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்