RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • மீனாட்சி சுந்தரம் 10:08 am on November 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    பூச்சாண்டி நண்பன் 

    poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

    வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

    ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

    தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

    போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

    LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

    பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

    டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

    முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

    காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

    -மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • சரசுராம் 9:52 மு.பகல் on நவம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அளவாய் இருந்தாலும் அழகான பதிவு. மீன்ஸ்.. உன் எழுத்தை மீண்டும் படிப்பதில் இன்னும் சந்தோசம். தொடர்ந்து எழுது. உன்னிடம் நல்ல சிறுகதைகளையும் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    • Karthik 5:56 மு.பகல் on நவம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள் மகனின் பதிவிற்க்கு, பதில் எழுதும் காலம் தூரத்தில் இல்லை….

      காலம் Proportional-ஆக மாறுகிறது, டெக்னாலஜி Exponential-ஆக வளறுகிறது !!!

  • மீனாட்சி சுந்தரம் 11:10 pm on October 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    ஒரே நாளில் இரண்டு லட்சம் 

    தீபாவளிக்கு ரெண்டுநாள் முன்பு மாலை டிவியில் சேனல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு செய்திச் சானலை cross செய்ய நேர்ந்தது.

    சாலையில் டிவி செய்தி நிருபரின் மைக்கில் அந்த common man “ ஆமா சார்… என்ன சார் பண்ணுறது? இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சு. அன்னைக்கு இல்லாட்டி என்ன? அடுத்த நாள் பார்த்துக்கிட வேண்டியது தான்..” என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
    MeatShop
    தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர் பேசியதைக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள … ரிமோட்டில் வால்யூம் அதிகம் செய்தேன்.

    அடுத்து ஒரு கோவில் புரோகிதர் அதே மைக்கில் “ பொதுவாவே சனிக்கிழமை விசேஷமானது தான். அதுல புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷம். அதுலயும் ரொம்ப முக்கியம் புரட்டாசியின் கடைசி சனி. அன்னிக்கு பகவானை கும்பிட்டா ஒரு வருஷம் கும்பிட்ட பலன், கும்பிட்டவாளுக்கு” என்றார்.

    புரட்டாசி கடைசி சனி, சாமிகளின் ஜம்போ பேக் போல.

    அடுத்து ஒரு கறிக்கடைக்காரர். “ஆமா சார். இந்த வருஷம் கடைசி சனியில தீபாவளி வருது. அதுனால வியாபாரம் கொஞ்சம் டல்தான். போன வருஷம் சென்னையில மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள் வெட்டுனம். இந்த வருஷம் அஞ்சு, ஆறாயிரம் போனா அதிகம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மறுவியாபாரத்துல கொஞ்சம் நடக்கும்னு நம்புறோம்.” என்றார்.

    வீட்டில் அனைவரும் சைவம். நான் அசைவம் சாப்பிடுவேன்…எப்பவாவது. என்றாலும் ஒரு நாளில் ரெண்டு லட்சம் ஆடுகள் என்றதும் திக்கென்றிருந்தது. கவனிக்கவும்! இது ஆடுகளின் கணக்கு மட்டும்.

    எனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை.

    புகையிலை, புகையிலைப் பொருள்கள் கேடு என்று சொல்லும் அரசு புகையிலை பயிரிடுவதைத் தடுப்பதே இல்லை.

    குடித்தால் கேடு என்னும் அரசே அதை விற்பனை செய்கிறது.

    குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஆனால் பார் இருக்கும். அதில் வண்டி நிறுத்தமும் இருக்கும்.

    வாகனங்களில் ஏர் ஹார்ன் தடை செய்யப் பட்டது. அதன் உற்பத்தி தடை செய்யப்படவில்லை. எனில் உற்பத்தியாகும் ஏர் ஹார்னை யார் உபயோகிக்கிறார்கள்?

    அளவிடும் மீட்டர் டேப்புகள் மொத்தமும் அரசாங்க முத்திரை வாங்கி வருவதில்லை.

    அதே போலத் தான்…

    சினிமாவில் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாயோ, குரங்கோ நடிப்பதை சித்ரவதை என்று மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் ப்ளூகிராஸ் இருக்கும் ஊரில் தான் இத்தனை மட்டன் கடைகள். பிரியாணி ஹோட்டல்கள்.

    யோசித்துப் பார்த்தால் குலை நடுங்குகிறது.

    ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள்.

    போதுமடா அசைவம்.

    - மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • kuttysamy 1:42 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ரசித்தேன் …தீபாவளி வாழ்த்துக்கள்

    • REKHA RAGHAVAN 1:47 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சிந்திக்கவேண்டிய விஷயம். அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

    • Vivek 11:17 மு.பகல் on அக்டோபர் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கறிக்கடையில் , இறைச்சி வாங்கும் போது கூட இது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழம்பு கொதிக்கும் போது, கூடவே அந்த உணர்வும் கொதித்து ஆவியாகிவிடும். கறி சாப்பிடுவது மட்டுமே மிருகவதையா ? நம்ம அன்றாட வாழ்க்கைல எத்தனையோ இருக்கே! நாம் உபயோகிக்கும் செருப்பு, ஷு, பர்ஸ், பெல்ட், பை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வேளை அது செத்துப்போன மிருகத்தின் தோல் என்பதால் அதை வெஜிடேரியன் மக்களும் ஏற்றுக்கொள்கிறார்களோ ?

      • மீன்ஸ் 9:52 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        300 வருசத்துக்கு ஒரு முறை தான் இப்படி வருமாம்.
        அப்படியாவது இரண்டு லக்‌ஷம் உயிரை காப்பாத்தியிருக்கார்னா கடவுள் இருக்கார் தானா?

    • Karthikeyan A 11:20 மு.பகல் on அக்டோபர் 23, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பேசாமல் தேசிய விலங்காக அறிவித்துவிட்டால் எப்படியிருக்கும்? பாருங்கள், இனிமேல் டால்பின்களை கொல்லமாட்டார்கள்.

  • மீனாட்சி சுந்தரம் 6:25 am on October 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: pollachi, walking   

    நடந்த கதை 

    பொள்ளாச்சியில் ரவுண்டானா என்றொரு இடம் உண்டு. மகாலிங்கபுரத்தில் மிகப் பெரிய வட்ட வடிவமான மைதானம் அது.

    என்னுடைய ஹைஸ்கூல் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளையும், மே மாத வெயில்களையும் புறந்தள்ளி கிரிக்கெட் விளையாடின கிரவுண்ட் அது. இப்போது நேரு புறாவிடும் கத்திப்பாரா சிலை வைத்து, ரவுண்டாய் ரோடு போட்டு, சுற்றிலும் வேலி அமைத்து வாக்கர்ஸ் கிளப் ஆரம்பித்து ஹைடெக்காய் மாற்றியிருந்தார்கள்.roundana

    மைசூரில் இருந்து வரும் ஞாயிறு மாலைகளில் அங்கே போன போது வாக்கிங் போகிறவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கும். அதிலும் பெண்கள்.

    கிட்டத்தட்ட பட்டுச் சேலை, ஒட்டியாணம் தவிர மற்ற நகைகள், பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு வியர்க்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் தான் போட்டிருக்கும் ரெபோக் ஷூ தெரிய சேலையை சாக்ஸூக்கு மேல் மிடி ஹைட்டில் கட்டியிருந்தது விநோதம். மாறாக ஹவாய் சப்பல் போட்டிருப்பவர்கள் அது மறையும் படி தழையத் தழைய சேலை கட்டி நடந்து கொண்டிருப்பார்கள். வாக்கிங் முடிந்ததும் நடைபாதைக் கடைகளில் பேல்பூரி, சில்லி காளான் ரெண்டு பிளேட் சாப்பிடுவது இவர்களது டயட்.

    ஒருமுறை 15 நாள் விடுமுறையில் காலையில் வாக்கிங் போன போது ஆண்களின் நடவடிக்கை இன்னும் விநோதம். சுகர், பிரஷர் பற்றிய பெருமைகளைப் பேசிக் கொண்டு வாக்கிங் போகும் டீம் ஒன்று, எனக்கு இதெல்லாம் இல்லை என்றவுடன் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்.

    மற்றும் ஒருவர் தன்னுடைய டிராக்‌ஷூட், ஸ்னீக்கர்ஸ் இத்தியாதிகளுடன் காலை ஐந்தரைக்கே வந்துவிடுவார். ஒவ்வொரு இடமாய் மாற்றி மாற்றி உட்கார்ந்து நடப்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு டாண் என்று ஏழு மணிக்கு கிளம்பிவிடுவார்.

    இன்னொருவர் காரில் வருவார். முன் சீட்டில் இருக்கும் டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்துவிடவில்லை என்றால் அன்று வாக்கிங் கட். அவ்வளவு கெளரவம்.

    இதில் என்னுடைய பழைய க்ளாஸ்மேட் ஒருவன், இங்கிருந்து முன்னூறு மீட்டரில் வீடு. தொடர்ந்து வாக்கிங் வந்தவன் நான்கு நாட்கள் வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு “ பைக் ரிப்பேர்டா மாப்ள…” என்றான்.

    - மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • kuttysamy 10:11 மு.பகல் on அக்டோபர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      nice..my wishes

    • REKHA RAGHAVAN 10:44 மு.பகல் on அக்டோபர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நான் 1975-76- ம் வருடங்களில் பொள்ளாச்சியில் அந்த ரௌண்டானாவை ஒட்டியிருந்த வெங்கட்ராமன் ரவுண்டு தெருவில் இருந்த மீன்துறை அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அந்த இடம் இப்போது ஹை-டெக்காக மாறியிருப்பது அறிந்து மகிழ்ச்சி. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. நல்ல பதிவு.

      ரேகா ராகவன்.

      • மீன்ஸ் 9:47 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பொள்ளாச்சி தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இது பாதிக்கும் இல்லையா?

    • soundr 7:13 மு.பகல் on அக்டோபர் 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //…பட்டுச் சேலை, ஒட்டியாணம் தவிர மற்ற நகைகள், பவுடர், லிப்ஸ்டிக்…..வியர்க்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். …..ரெபோக் ஷூ தெரிய சேலையை ….. மிடி ஹைட்டில் கட்டியிருந்தது ……..ஹவாய் சப்பல் …………மறையும் படி …..கட்டி நடந்து கொண்டிருப்பார்கள். ……நடைபாதைக் கடைகளில் பேல்பூரி, சில்லி காளான் சாப்பிடுவது ……டிராக்‌ஷூட், ஸ்னீகர்ஸ் இத்தியாதிகளுடன் …..உட்கார்ந்து நடப்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டுகிளம்பிவிடுவார்…… டிரைவர் கதவைத் திறந்துவிடவில்லை என்றால் அன்று வாக்கிங் கட். //
      பெருமைக்கு ப.. மேய்பது, என்பது இது தானா…?

      • மீன்ஸ் 9:43 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பெருமைக்கு எருமை ஓட்டுவது என்பார்கள் எங்க பக்கம்.
        நன்றி

    • Lakshmi Narayanan 9:02 பிற்பகல் on அக்டோபர் 19, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Meens
      How are you?..Good to see you in bloggers world….Please keep blogging.

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்