Updates from நவம்பர், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 8:09 am on November 15, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    கற்றது தமிழ் மட்டுமல்ல 

    கற்றது தமிழ் பார்க்கையில் சட்டென நினைவுக்கு வந்தவர் தமிழாசிரியர் ஆ. கணேசன். நான் எழுத ஆரம்பித்ததற்கான பல காரணிகளில் அவரும் ஒருவர். பெற்றோர் விருப்பத்துக்காக பி.எஸ்.சி தாவரவியல் படித்து விட்டு, தன் சொந்த விருப்பத்துக்காக எம்.ஏ தமிழ் படித்து, தமிழ் ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

    வகுப்பில் பாதி நேரம் பாடம் நடத்தினால் மீதி நேரம் பொது விஷயம் போதிப்பார். அந்த அடலஸன்ட் பருவத்தில் மனதிலிருக்கும் பல கேள்விகளுக்கு யாரும் கேட்காமலே வகுப்பறையில் அவர் விடை சொல்லியிருக்கா விட்டால், சரியாகத் தெரிந்து கொள்ள பல நாளாகியிருக்கும். அல்லது தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

    இயற்பியல் பேராசிரியர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது. ” என்ன நீ அந்த ஆளோட அதிகமா சுத்திட்டிருக்கே ? நீ ஒழுங்கா படிக்கிற பையன். உருப்படாம போயிடாதே. “. இதெல்லாம் தொழில்நுட்ப பள்ளியில் நான் பத்தாவது படிக்கும்போது நடந்தது. டிப்ளமோ முடித்ததும் எனது முதல் சிறுகதை சாவியில் வெளியானது. வழியில் அவரை சந்தித்தபோது, ” நிறைய எழுதுப்பா. ” என்று மெலிதான ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.

    சரி, கடைசி பத்திகள் பார்த்த சினிமாவுக்கு அர்ப்பணம். படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல். ஒளியை கதை சொல்ல பயன்படுத்துவது தமிழ் சினிமாக்களில் அபூர்வம். இதில் படம் பூராவும் ஒளியமைப்பும் சேர்ந்து கதை சொல்கிறது. பாலாவும், தங்கர்பச்சனும் குத்தாட்டத்தோடு சாதித்ததாகச் சொல்லிக் கொண்டதை இந்த இயக்குனர் – நிஜமாத்தான் சொல்றேன் – சாதித்திருக்கிறார். ஏற்கெனவே காதல் திரைப்படம் 90% நெருங்கியது. சில பாடல் காட்சிகளில் கோட்டை விட்டது. பதினாறு வயதினிலே கிராமத்தைக் காட்டிய மாதிரி இது நகரத்தையும், இன்றைய காலகட்டத்தையும் அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறது. ஆனால், காட்சியமைப்புகளில் இருந்த யதார்த்தம் கதையில் பல இடங்களில் சறுக்குகிறது. நாயகன் கொலைகள் செய்ய வலுவாகக் காரணங்கள் இருந்தாலும், ‘கொலை செய்ய காரணம் தேவையில்லை’ என்றும், ‘தமிழ் படித்ததால் கொலை செய்தேன்’ என்றும் ஆரம்பக் காட்சியிலேயே அஸ்திவாரம் போட்டது ஃபான்ட்டஸி. கிராமத்தில் போலிஸ் சுற்றி வளைக்கும் காட்சியை இயக்குநர் வைத்திருக்க மாட்டார். சென்சார் போர்டு வைத்திருந்திருக்கும். இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.

    வாழ்க்கையைப் படிக்காத அந்தக் கதாநாயகனுக்கு தமிழ் அல்ல, கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் இதே கதிதான்.

     
    • T.V.Radhakrishnan(raki) 3:15 பிப on நவம்பர் 15, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      I am a script writer.so far I have written 14 drama scripts and more than 30 short stories.my script Bharataratna not only won the best script award but also selected as the best script of 2005.All the credits goes to my tamil teacher(srmhs,ambattur)sri Ramachandran

    • Manki 6:35 முப on திசெம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.//

      நிஜ வாழ்க்கையில் so-called தீமை ஜெயிப்பதைத்தான் தினமும் பார்க்கிறோமே. ஒரு கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் ஏன் அது கூடாது?

    • சத்யராஜ்குமார் 8:45 முப on திசெம்பர் 25, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Manki, கதை அல்லது திரைப்படத்தில் மட்டும் அது கூடாது என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பட்ட கதைகளை நானே எழுதியிருக்கிறேன். ஸ்தாபிக்க முயன்ற உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டேன்.

    • பொன்.சுதா 11:10 பிப on ஜனவரி 8, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அய்யா சரியான விமர்சனமுங்க…

    • சத்யராஜ்குமார் 9:06 பிப on ஜனவரி 9, 2008 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பொன்.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  • சத்யராஜ்குமார் 1:02 pm on November 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    தூதரகம் 

    கொடி பறக்குமா என்று தேடிக் கொண்டே காரை விரட்டிச் சென்றேன். நல்ல வேளை சிங்க முகம் கண்ணில் பட்டது.  நிறுத்துமிடம் தேடி நிறுத்துவதற்குள் நூறு மீட்டர் ஓட்டம் ஓடிய  மாதிரி மூச்சிறைத்தது. பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியத் தூதரகம் சென்றிருந்தேன்.

    10′ x 10′ க்கு கொஞ்சம் அதிகமாய் முன்னறை. இரண்டு சோபாக்கள். நான் நுழைந்தபோது சுமார் பதினைந்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.  மொட்டையாய் இருந்த சுவர்களில் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் செயல் முறைகள் பற்றி சுருக்கமாய் விவரித்து வைத்தால், வந்ததும் எல்லாருக்குமே ஏற்படும் பதினைந்து செக்கண்ட் குழப்பம் தவிர்க்க ஏதுவாயிருக்கும்.

    புஷ்டியாய் மீசை வைத்து போலிஸ் பார்வையால் ஸ்தலத்தை கண்காணித்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான அன்பரிடம்தான் வருவோர் போவோரெல்லாம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. சூயிங்கம் மென்று கொண்டே உள்ளே வந்த அந்த இளைஞரை ரொம்ப உக்கிரமாய் முறைத்தார் அவர். அந்த இளைஞரின் உடையும், பாவனையும்தான் முறைப்புக்கு முக்கிய காரணம். கிழி(த்து விடப்பட்ட?)ந்த, சாயம் போன ஜீன்ஸ். அங்கங்கே நூல் நூலாய்த் தொங்கும் டி சர்ட். காதலில் தோற்ற மாதிரி தாடி. கருணாஸ் போல கழுத்தில் நாய்ச் சங்கிலி கணக்காய் வெள்ளை உலோக ஆபரணம்.

    அந்த ‘ப்ரதரை’ பார்த்தால் எனக்கே கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. விசா வாங்க அமெரிக்க தூதரகத்துக்கு இதே அலட்சியத்துடன் சென்றிருப்பாரா ? ஓர் அரசாங்க அலுவலகத்துக்குச் செல்லும் குறைந்தபட்ச உடை நாகரிகம் ஏன் தெரியவில்லை ?

    இதைப் பற்றி யோசித்தபடி ஐந்து நிமிஷங்கள் கழிந்திருக்கும். அந்த மீசைக்கார செக்யுரிட்டி அன்பர் அப்போதுதான் வந்த யாரோ மூன்று நான்கு பேரை, ” ஆயியே ஜி, ஆயியே ஜி! ” என்று வரவேற்று வரிசையில் பொறுமையாய் நிற்பவர்களின் நேர்மையின் மேல் காறித் துப்பும் வண்ணம் நேராக கவுன்ட்டருக்கு அழைத்துச் சென்றார்.

    நான் கிழிந்த ஜீன்ஸ் ப்ரதரைப் பார்க்க, பெரிதாய் ஊதிய சூயிங்கம் குமிழியை பட்டென்று வெடித்து தன் கோபத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்.

     
    • ILA 2:22 பிப on நவம்பர் 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நீங்கள் எழுதும் கதைகளை தவறாமல் படித்து வருபவன் நான். உங்கள் கதைகளைப் பற்றியும், பிறகு இடைவெளி பற்றியும் ஒரு மாதம் முன்புதான் பேசிக்கொண்டிருந்தோம்.. வரவுக்கு நன்றி

    • சத்யராஜ்குமார் 2:40 பிப on நவம்பர் 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ILA, தங்கள் அன்புக்கு நன்றி. புதிதாய் எழுதி நாளாகி விட்டது. இருப்பினும் முன்னர் எழுதிய கதைகளை அவ்வப்போது தட்டச்சிட்டு வெளியிட முயல்கிறேன்.

    • துளசிகோபால் 2:57 பிப on நவம்பர் 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நறுக்குன்னு நாலே வார்த்தையில்(???) சொல்லவேண்டியதைச் சொல்லும் விதம் சூப்பர்.

      ரொம்ப நாளா உங்க விசிறியா இருக்கேன்:-))))

    • சத்யராஜ்குமார் 3:10 பிப on நவம்பர் 12, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      துளசிகோபால், தங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பொறுமை குறைவு. ஆகவே சுருக்கமாய் எழுதி தப்பிக்கிறேன் 🙂

  • சத்யராஜ்குமார் 7:40 am on November 8, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    காதல் 

    சுஜாதா குமுதம் ஆசிரியர் ஆனபோது அப்பத்திரிகையில் ரெகுலராய் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலர் திணறிப்போனார்கள். பல காலமாய் குமுதம் ஆதரித்து வந்த சில கதை வடிவங்கள் திடீரென மறுக்கப்பட்டது.

    ” என்ன ஸார் கதை போடறான் சே ! ” என்று அவர்கள் குமுதத்தைத் திட்டினார்கள். ஏற்கெனவே நான் ட்ரான்சிஷனில் இருந்ததால் அங்கே நிகழும் மாற்றங்களை என்னால் சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது.  

    கதை என்பது வெறும் மொழிநடையோ, திருப்பங்களோ மட்டுமல்ல; அவற்றைக் கடந்து அதைப் படித்த பின் ஏற்படும் உணர்வு என்பதை ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன். வாழ்க்கையின் இயல்பான தருணங்களை அடிக்கோடிட்டு கதைகளாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. குமுதத்தின் அப்போதைய எதிர்பார்ப்பும் அதுதான். அப்படி எழுதிய ‘காதல்’, ‘சுருண்டு கிடந்தார்’, ‘கூடு’ போன்ற சிறுகதைகளை குமுதம் உடனே வெளியிட்டது. 

    காதல் குறுங்கதையை இந்த வார தமிழோவியத்தில் வாசிக்கலாம்.

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி