Updates from ஜனவரி, 2008 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்
-
சத்யராஜ்குமார்
Game Boy Advance– காலாவதியாகி விட்டது. இனியும் அதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்று அகில் சொல்லி விட்டான். அந்தக் குட்டி இயந்திரம் மிக நன்றாகத்தான் வேலை செய்கிறது. ஆனாலும் அதை வைத்துக் கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரை தட்டச்சு மெஷினை வைத்து வலைப்பூ எழுத முயல்கிற மாதிரி என்பது புரிந்தது. இதனால் தனது நட்புகள் பாதிக்கப்படுவதாக வருந்தினான்.செய்த ஆராய்ச்சியில் இப்போது Wii – தான் மிகப் பிரபலம் என்று தெரிகிறது. இதில் டென்னிஸ், பௌலிங் எல்லாம் நிஜமாகவே வியர்வை சிந்த விளையாடலாம். ஆஸ்பத்திரிகளில் பிசியோ தெரபிக்கு உபயோகிப்பதாகவும் கேள்விப்பட்டேன். எங்குமே ஸ்டாக் இல்லை. Best Buy (ஹைப்பர் லிங்க் கொடுத்துக் கொடுத்து களைப்பாகி விட்டது)- ல் கேட்டால் என்றைக்குக் கிடைக்கும் என்று பேப்பர் பார்த்துக் கொண்டிருங்கள். கிடைக்கும் என்று தெரிந்தால் காலை ஐந்து மணிக்கு வந்து வரிசையில் நில்லுங்கள் என்பது பதில்.கடைசியில் Nintendo DS Lite வாங்கினோம். WIFI வசதி உண்டு. ஒரே நெட்வொர்க்கில் இருக்கும்போது விளையாட்டுக்களை பரிமாறிக் கொள்ளலாம். இப்போது அகிலுடைய நாட்காட்டியில் நிறைய Play Date Appointments. -
சத்யராஜ்குமார்
சரசுராம் என்றொரு எழுத்தாளர்
சரசுராமின் ‘இன்னொரு மழைக்கு முன்பு’ சிறுகதைத் தொகுப்பை தனது ஆய்வுக்கு எடுத்திருக்கும் அன்பர் அது தொடர்பாக என்னிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கான என் பதில்களும்.1. சரசுராமின் ஆரம்ப கால நடை எப்படி இருந்தது? அதன் மாற்றத்திற்கான உங்கள் பங்களிப்பு என்ன ?
அது எண்பதுகளின் இறுதியில். அப்போது மர்ம நாவல்களும், திகில் கதைகளும் உச்சத்தில் இருந்தன. அவைகளின் பாதிப்பு அவர் நடையிலும், கதையிலும் இருந்தது. அவைகளும் ஒரு குறிப்பிடத்தக்க கதை வடிவமே என்ற வகையில் ரஷ்யாவில் நிகழ்ந்த பூகம்ப சம்பவத்தை வைத்து சரசுராம் அப்போது எழுதின குற்றவியல் சிறுகதை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.பின்னர் அவர் நடையில் ஏற்பட்ட மாற்றத்துக்குக் காரணமாக அவரின் விரிந்து பரந்த இலக்கிய வாசிப்பையும், அவ்விலக்கியப் படைப்புகளுடனான சுய ஒப்பீடுகளையுமே சொல்ல முடியும். அதில் என் பங்களிப்பு எதுவும் இருப்பதாகக் கருதவில்லை.அவருடைய இலக்கிய வாழ்வில் என் பங்களிப்பு எனப் பார்த்தால், எழுத்தாளர் என்பவர் நம்மிடையே வாழ்பவர்தான்… நாமும் எழுதலாம்… போன்ற அடிப்படை நம்பிக்கைகளை நான் தோற்றுவித்திருக்கலாம். தீவுகளாக இருக்காமல் கலந்து பேசிக் கொள்வது… கதை எழுதும் நுட்பங்களை சூத்திரம் போல மறைக்காமல் வெளிப்படையாய் பரிமாறிக் கொள்வது… தன் கதையை எழுதும் முன்பே கூட மற்றவரிடம் சொல்லி ஈகோ இல்லாமல் அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்ப்பது போன்ற நடைமுறைகளை எங்கள் வட்டத்தில் இயல்பாக ஆக்கியதால் சரசுராம் துவங்கி மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், சித்ரன், கனகராஜ் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் கிடைத்தார்கள்.2. சிறுகதைகள் பற்றி பொதுவான இலக்கணம் என்ன ? உங்களுடைய வரைமுறைகள் என்னென்ன ?படித்த பின் வாசகர் மனதில் ஒரு உறுத்தல் தர வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த இலக்கணமும் இரண்டாம் பட்சமே.மேற்சொன்ன இலக்கணத்திற்கு உட்பட வேண்டும். படிக்க சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட இலக்கியம் ஆனாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். இவையே எனது வரைமுறைகள்.3. சரசுராம் பற்றி ?அவருடைய எழுத்துக்கள் பற்றி ?சரசுராம் வாழ்க்கையின் பலதரப்பட்ட அசைவுகளை மிக ஊன்றிக் கவனித்து உள்வாங்கக் கூடியவர். அவர் எழுத்துக்களின் வலிமை விவரணையில் உள்ளது. எந்த சம்பவத்தையும் அவற்றுடன் பின்னிய உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் கை தேர்ந்திருக்கிறார். அவருடைய சிறுகதை ஒவ்வொன்றும் ஒரு High Definition காட்சிப் படத்தை உங்கள் மனதில் வரையும்.4. இன்னொரு மழைக்கு முன்புசிறுகதைத் தொகுப்பு பற்றி…அமெரிக்காவில் இருப்பதால் தொகுப்பு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. நிச்சயம் அத்தொகுப்பில் நான் படிக்காத கதை எதுவும் இருக்காது. இருப்பினும் இன்னும் பார்க்காததால் தொகுப்பு என்ற முறையில் அப்புத்தகம் பற்றிய எனது பார்வையை இப்போது எடுத்து வைக்க இயலவில்லை.5. சரசுராமின்பிடித்த சிறுகதை…மிகவும் பிடித்த சிறுகதை ‘இன்னொரு மழைக்கு முன்பு’. எழுத்துக்களில் மிகவும் ரசித்தது சித்ரனின் கோடிட்ட இடங்கள் தொடரில் ஒவ்வொரு அத்தியாயம் முன்பும் ‘அம்மா’ பற்றி சரசுராம் எழுதிய சின்னச் சின்ன சம்பவக் குறிப்புகள்.6. ஒரு நண்பராக,எழுத்தாளராக,சினிமாக்காரராக…முதலில் நண்பராக அவரை சந்தித்து விட்டதால் நண்பராக மட்டுமே பார்க்க முடிகிறது. அது ஒரு புறம் இருக்க, ஒரு எழுத்தாளராக அல்லது சினிமாக்காரராக சந்தித்திருக்க நேர்ந்தாலும் – இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகும் முறையால் யாரிடமும் ஒரு நண்பராக மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடியவர் சரசுராம்.
-
பொன்.சுதா
அய்யா உங்கள் எழுத்துக்கள் பக்குவப் பட்டு எல்லாம் கடந்த, முற்றக் கனிந்த ஒரு கனிச் சுவையுடன தற்போது இருப்பதாக எனக்குப் படுகிறது.
-
சத்யராஜ்குமார்
நன்றி பொன்.சுதா ! கல்கியில் ‘அந்நிய துக்கம்’ எழுதும் முன் ஏற்பட்ட இடைவெளியில் கற்றுக் கொள்ள செலவிட்ட நேரம் மிகவும் பயன் தந்தது. தருகிறது.
-
-
ravi
sarasuram avargalin sirukathigal padippathrku migavum elimayana nadaiel amaindhullathu.nigazhvugalai kanmun kattum avarin ezhuthukkal.avar kathail eppozhuthum passitivana karuthukkal amaivathu avaruke urithanadu.
-
சத்யராஜ்குமார்
நன்றி ரவி. நீங்கள் சொல்வது சரியே.
-
சத்யராஜ்குமார்
இட்லி வடை
அகிலாவின் அம்மா அப்பாவைக் கூட்டிப் போகிற சாக்கில் Atlantic City Casino-க்களில் ஓர் இரவு.
Slot Machine சப்தங்களும், கண்களைக் கூசும் மின் விளக்குகளும் தருவது ஒரு வித போதை. ஒரிஜினல் போதையும் இலவசமாய் வழங்க கோப்பைகளை தட்டில் ஏந்தி அங்குமிங்கும் வலம் வரும் அழகிய நங்கைகள். தொழில் முறை சூதாட்டக்காரர்கள் தண்ணீர் தவிர வேறேதும் அருந்தாமல் கலையும் சீட்டுக்களையும், உருளும் அதிர்ஷ்டச் சக்கரங்களையும் உற்றுப் பார்த்தபடி காசை வெட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குக் கிடைத்த தகவல். எனினும் Always the house wins என்பது பிரபல சொலவடை.
சொலவடை என்றதும் இட்லி வடை என்று தலைப்பு வைத்தது ஞாபகம் வருகிறது. Casino அலுத்ததும்தான் பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்ததை மனசு உணர்ந்தது. இரண்டு நாளாய் பர்கரும் பிட்ஸாவும் மட்டுமே சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்ததால் எல்லோருக்குமே சாம்பார் மணத்துடன் இட்லி வடை சாப்பிட வேண்டும் போலிருந்தது.
கொட்டும் மழையிலும் ஒரு மணி நேர கூடுதல் பிரயாணத்தை துச்சமாய் மதித்து ந்யூ ஜெர்சி Oak Tree Road செல்லத் தீர்மானித்தோம்.
சரவண பவன்.
அதே சென்னை மணத்துடன் இட்லி வடை தோசை எல்லாமே கிடைத்தது. நான் Full Meals தேர்ந்தெடுத்தேன். முள் கரண்டி தேக்கரண்டி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு பிடி பிடித்தேன்.
சென்னை ஆனாலும் சரி, ந்யூ ஜெர்சி ஆனாலும் சரி, சாப்பிடும் முன் கால் கடுக்க காத்திருக்க வைக்கும் ஒரே காரணத்துக்காக சரவண பவனை எப்போதும் நான் வெறுக்கிறேன்.
-
REKHA RAGHAVAN
நல்ல அனுபவம்தான் போங்கள்.
-
சத்யராஜ்குமார்
RAGHAVAN, 🙂
-
kumar
Saravana bavan has not changed even after 22 years. I still remember 1985 at T Nagar.
Either them nor we.
kalyanakamala 11:47 பிப on ஜனவரி 24, 2008 நிரந்தர பந்தம் |
நீங்களும் பாரதியைத் திட்டுகிறீர்களோ என்று பார்த்தேன்! நல்ல வேளை இல்லை. thankகொட்!
கமலா
kalyanakamala 11:52 பிப on ஜனவரி 24, 2008 நிரந்தர பந்தம் |
thnkgod என்று படிக்கவும்.
கமலா
சத்யராஜ்குமார் 6:24 முப on ஜனவரி 25, 2008 நிரந்தர பந்தம் |
@kalyanakamala: ‘ஒரு குழந்தையை(க்கூட) வையாதே பாப்பா’ என்று சொன்ன பாரதியை நான் ஏன் திட்டப் போகிறேன். 🙂
kalyanakamala 1:05 முப on ஜனவரி 26, 2008 நிரந்தர பந்தம் |
நன்றி சத்யராஜ்!
அன்புடன்
கமலா