மைய விலக்கு
‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
~ சத்யராஜ்குமார் ~
பரிசுக்குரிய கதையாக தேர்வு செய்த உரையாடல் குழுவினருக்கு நன்றி.
செல்போனை உடைக்கலாம் போல ஆத்திரம்.
எதிர்முனையில் பேசியது நிஷா. கோபம் அவள் மேல் இல்லை. அந்த வயசான ஜன்மத்தின் மேலே. அதாவது அவன் அப்பா. இன்னும் கொஞ்சம் மரியாதையாய் குறிப்பிடலாம். ஆனால் கோபத்தில் மரியாதை எப்போதும் நேரெதிர் விகிதம்.
“நிஷா, நீ இப்ப வீட்டில் கத்தி ரணகளம் பண்ணாதே. எதுவா இருந்தாலும் நான் வந்து பேசிக்கறேன்.”
“அவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சிவா. குழந்தைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிருக்கார். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ் எனி மோர்.”
“நான் மீட்டிங்கிலிருக்கேன். சாயந்தரம் அவர் கிட்டே பேசிக்கறேன். போனை வெக்கறியா?”
நிஷா வைக்கப் போவதில்லை. போனில் இன்னும் பேச்சுக் குரல். இணைப்பைத் துண்டித்து, ஸ்விட்சையும் அழுத்தியதில் மொத்தமாய் அடங்கியது போன். எதிரே இருந்த வெள்ளைக்காரர்கள் சிவந்து போன அவன் முகம் பார்த்து, “எனிதிங் ராங் ஷீவா?” என்றார்கள்.
பாட்டில் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து ஆசுவாசப்படுத்தியபடி தலையாட்டினான். “நோ, நோ. லெட்ஸ் கோ அஹெட்.” அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங் அறையில் அந்த அமெரிக்கர்கள் பேசியது மண்டைக்குள் ஏறவில்லை. அப்பாவின் முகம் கிட்டத்தில், தூரத்தில் என்று கண் முன்னே ஆடியது.
‘அமெரிக்கா வேண்டாம்டா சிவா. எல்லாருமே மெட்ராஸ் போயிரலாம்.’
எட்டாவது மாடியிலிருந்து சரசரவென கீழிறங்கியது கார். ஸ்டாப் பலகையை மதிக்காமல் போய் வெள்ளைக்காரியிடம் ஹாரனில் திட்டு வாங்கிய பின், நெடுஞ்சாலை. ரியர் வ்யூ கண்ணாடி எதிலும் கண்ணுக்கெட்டிய வரை போலிஸ் தெரியாததால் சரக்கென்று எண்பது மைல். ரேடியோ அலைவரிசையில் அவன் காரை உணர்ந்து மேலேறியது கராஜ் கதவு.
யுத்தம் முடிந்த பூமி போல் வீட்டுக்குள் பயங்கர நிசப்தம். விடியோ கேம் இசை, கார்ட்டூன் அலறல் என்று எப்போதும் களேபரமாய் இருக்கும் குழந்தைகளின் அறை கூட மவுனப்படம் போலிருந்தது. ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாய் உட்கார்ந்திருந்தார்கள்.
“அம்மா எங்கடா?”
பெரியவனைக் கேட்டதும், சின்னப் பெண்ணிடமிருந்து பதில் வந்தது. “மேலே மாஸ்டர் பெட்ரூமில் படுத்திருக்கா.”
“கோபமாயிருக்கா.” – என்றான் பெரியவன் பிற்சேர்க்கையாய்.
“தாத்தா?”
“பூஜை ரூம்ல.”
மவுஸை அசைத்து ஸ்க்ரீன் ஸேவர் ஓடிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை தட்டியெழுப்பினான். இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.
பூஜை அறை கதவைத் தள்ளி, “அப்பா. நீங்க சாமி கும்பிட்டது போதும். கொஞ்சம் என் கூட வாங்க.”
பார்க்கில் கறுப்பு, பழுப்பு, சிவப்பு என்று கலர் கலராய் குழந்தைகள். நாய்க்குட்டியோடு வாக்கிங் போகும் வெள்ளைக்கார பெண்கள். ஒரு மர பெஞ்ச்சை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான் சிவா. கிரிதரன் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்ததும், “மறுபடி ஆரம்பிச்சிட்டிங்களாப்பா? இந்தியாவில் கார்ல ஸீட் பெல்ட் கூட போட வேண்டியதில்லை. சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா வீட்டுக்குள் அடைஞ்சிருக்கத் தேவையில்லை. தெருவில் விளையாடலாம். இது மாதிரி இன்னும் என்னென்னமோ சொல்லி குழந்தைகளை தூண்டி விட்டிங்களா?”
“நிஜத்தைத்தாண்டா சொன்னேன்.”
“அப்பா, நீங்க அவங்களை டிமாரலைஸ் பண்றிங்க. இங்க குழந்தைங்க அவங்களா மனசு வெச்சுப் படிச்சாத்தான் உண்டு. நானும் நிஷாவும் ரொம்ப பாடுபட்டு அவங்களை போக்கஸ்டா கொண்டு போய்ட்டிருக்கோம். இப்படி வேண்டாததை நீங்க பேசினா வீட்ல பிரச்சனை ஜாஸ்தியாகும்.”
“நீயும், நிஷாவும் அங்க படிச்சித்தானே இங்க வந்திருக்கிங்க? ப்ரீ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா ஒரு டாக்டர் அல்லது என்ஜினியராக்கி வெளியே தள்ளிடுவாங்க. நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.”
“எனக்குக் கோபம் வரதுக்குள்ள இந்த பல்லவியை விட்டுருங்க. எங்களுக்கு இங்கதான் வேலை. இங்கதான் இருந்தாகணும்.”
“என்ன பெரிய வேலை. இந்த வெள்ளைக்காரன் கம்பெனியைப் பத்தி எனக்குத் தெரியாதா? எந்த நிமிஷம் வேணா சீட்டைக் கிழிச்சு ஃபயர் பண்ணுவான். கடைசி வீட்டு சர்தார்ஜி இல்லே… அவனுக்கு வேலை போயிருச்சு. கடனில் வாங்கின வீட்டுக்கு மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு மொத்தமா ஊருக்குத் திரும்பிப் போறான்.”
சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. அடக்கிக் கொண்டு பொறுமையாய் சொன்னான். “எங்க வேலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அம்மாவும் போயாச்சு. சும்மா முரண்டு பிடிக்காம ரிட்டயர்ட் வாழ்க்கையை நிம்மதியா இங்க பார்க், லைப்ரரின்னு கழிங்க. மெட்ராஸ் வீட்டை விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”
“முடியாது.”
“முடியாதுன்னா இப்படி வீடு போர்க்களமா இருப்பது எனக்கும் பிடிக்காது. நீங்க மட்டும் ஊருக்குப் போக வேண்டியதுதான். கடைசி காலத்தில் பையன் கவனிக்கலைன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதிங்க.”
“டேய் சிவா…” கிரிதரன் கலங்கின கண்களோடு அவனைப் பார்த்தார். உடைந்து போன குரலில் மெல்லமாய் சொன்னார். “சரி எனக்கு டிக்கட் போட்டுருடா. இந்த லைஃப் ஸ்டைல் ஒத்து வராது. தினமும் காலைல நடேசன் பார்க் போய் ஃப்ரெண்சோட அரசியல் பேசணும். ரோட்டோர கடையில் டீ குடிக்கணும். திண்ணையில் உக்காந்து ஹிண்டு பேப்பர் படிக்கணும். கல்யாணம், காதுகுத்துக்குப் போகணும். நிறைய மனுஷங்க வேணும். நாப்பது அம்பது வருஷமா வாழ்ந்து பழகின வாழ்க்கையை சட்னு என்னால விட முடியாது..”
“போயிடுங்க. பசங்க எதிர்காலத்தைப் பத்தி உங்களுக்கு அக்கறையில்லை. கல்யாணமும், காதுகுத்தும்தான் முக்கியம். அங்கயே போயிடுங்க.”
சிவாவுடைய மனதின் ஆழத்தில் இருந்த மிக மெல்லிசான குற்ற உணர்ச்சி கூட நிஷாவுக்கு இருக்கவில்லை. “அவரால நமக்கு தொல்லைதான் அதிகம். பிள்ளைங்க கெட்டுப் போயிருவாங்க. டிராவல் ஏஜன்ட்கிட்ட இன்னிக்கே பேசிடறேன்.” என்றாள்.
அந்த வாரக் கடைசியில் ஏர்போர்ட். பேரக் குழந்தைகளை வாஞ்சையாய் அணைத்து தலையில் முத்தமிட்டார். இது கடைசி முத்தமா, இன்னும் பாக்கி இருக்கிறதா?
மெட்ராஸ் வெய்யிலும், இரைச்சலும், வியர்வை நாற்றமும் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. ஜெட் லேக் சரியானதும், தகர உடம்பு லொட லொடவென நடுங்க, மண் புழுதி கிளப்பிக் கொண்டு செல்லும் தனியார் பஸ்சில் கொங்கலபட்டி போனார் கிரிதரன். வயல்வெளிக்கு நடுவே தாழ்வான ஓட்டு வீடு.
சுருக்கங்களே முகமாய்ப் போன எண்பது வயதுக் கிழவி, இடுங்கிய கண்களால் அவரை உற்றுப் பார்த்து, “கிரிதரா…” என்றது.
பிளாஸ்டிக் மாலையுடன் சுவரில் மாட்டியிருந்த கறுப்பு வெள்ளை படத்துக்கு முன்னே போய் நின்றார். கண்ணில் கரகரவென்று கண்ணீர். “அப்பா, உங்க மனசைப் புரிஞ்சிக்க எனக்கு முப்பத்தஞ்சு வருஷமாச்சு.”
oo00oo
அடலேறு 9:29 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
ரசனை !!!
பினாத்தல் சுரேஷ் 10:07 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
மிக மிக மிக மிக அருமை! ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல கதை படிச்ச அனுபவம்!
prakash 10:18 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
வாவ்…. இப்படி நறுக்குன்னு ஒருசிறுகதை படிச்சு எத்தனை நாளாச்சு?
ilamurugu 10:25 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
நச்!
msathia 11:16 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
மனம் கனத்தது.
நிமல் - NiMaL 11:33 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
அருமை….
barath 11:35 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
அருமை!!
t.V.Radhakrishnan 11:58 முப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
நறுக்குன்னு ஒருசிறுகதை
சித்ரன் 12:04 பிப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
சிறுகதை நன்றாயிருக்கிறது. இதில் இருக்கிற விஷயம் ஒரு விவாதத்திற்கான களத்தைத் தாங்கியிருப்பதுபோல் தோன்றுகிறது.
Meenaks 12:10 பிப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
Good one!
சத்யராஜ்குமார் 5:37 பிப on ஜூன் 8, 2009 நிரந்தர பந்தம் |
கதையை ரசித்துப் பாராட்டியிருக்கும் அனைவருக்கும் நன்றி.
என். சொக்கன் 2:53 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
அழகான கதை சத்யராஜ்குமார் – அநேகமாக என் இணைய நண்பர்கள் எல்லோருடைய பாராட்டுகள், பலத்த சிபாரிசுகளுடன் படிக்கத் தொடங்கியதால் கடைசி வரித் திருப்பம்மட்டும் எனக்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை 🙂 அது உங்களுடைய தப்பும் இல்லை :)))
– என். சொக்கன்,
பெங்களூர்.
சத்யராஜ்குமார் 5:26 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி சொக்கன். இந்த வருஷம் கல்கி சிறுகதை போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று எண்ணி அதற்காக உருவாக்கின கதை. உரையாடல் அறிவிப்பைப் பார்த்துவிட்டு, சரி இதற்கே எழுதி விடுவோம் என்று இங்கே எழுதி போட்டு விட்டேன்.
Mrithula 4:31 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
Really awesome story !!!
சத்யராஜ்குமார் 5:22 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
Mrithula, Thanks for the comment!
இரா.வசந்த குமார். 5:42 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
nice one. the reverse is ::
http://kaalapayani.blogspot.com/2006/09/blog-post_08.html
tnx.
சத்யராஜ்குமார் 6:18 முப on ஜூன் 9, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி வசந்தகுமார். உங்கள் கதை படித்தேன். நன்றாக இருக்கிறது. அப்பா, மகன், அமெரிக்கா இரண்டிலும் இருந்தாலும் இரு கதைகள் சொல்லும் விஷயமும் வேறு வேறு என நினைக்கிறேன்.
Gowtham 12:19 முப on ஜூன் 11, 2009 நிரந்தர பந்தம் |
Nice one, with common dialogues of dilemma… last line consolidated all… well written. Why this name?
சத்யராஜ்குமார் 1:57 முப on ஜூன் 11, 2009 நிரந்தர பந்தம் |
Thanks Gowtham. The title refers to the centrifugal nature of human life going away from the origin, generation by generation.
Subbu 7:46 பிப on ஜூன் 11, 2009 நிரந்தர பந்தம் |
கதையல்ல நிஜம்!!
சத்யராஜ்குமார் 8:42 பிப on ஜூன் 11, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி சுப்பு!
SnapJudge 9:27 முப on ஜூன் 15, 2009 நிரந்தர பந்தம் |
Retweeting chithran 🙂
—சிறுகதை நன்றாயிருக்கிறது. இதில் இருக்கிற விஷயம் ஒரு விவாதத்திற்கான களத்தைத் தாங்கியிருப்பதுபோல் தோன்றுகிறது.—
சத்யராஜ்குமார் 5:54 பிப on ஜூன் 15, 2009 நிரந்தர பந்தம் |
பாலா, நன்றி.
பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள் « Snap Judgment 2:04 பிப on ஜூன் 15, 2009 நிரந்தர பந்தம் |
[…] 1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today […]
dYNo 4:04 பிப on ஜூன் 15, 2009 நிரந்தர பந்தம் |
நல்லா இருக்குங்க. மத்தவங்க சொன்னாப்பல முடிவு வலிந்து செலுத்துனதுமாதிரி இருந்தாலும், வேற எப்படி முடிக்கணும்னும் சொல்லத் தெரியலை. என்.ஆர்.ஐ எல்லார் வாழ்க்கையிலும் இயல்பாய் வர்றது, நீங்க படம் புடிச்சி ஃப்ரேம் போட்டு அழகாக்கிட்டீங்க!
வாழ்த்துகள்!
சத்யராஜ்குமார் 6:09 பிப on ஜூன் 15, 2009 நிரந்தர பந்தம் |
dYNo, எழுதப்பட்ட கதைக்கு எழுதியவனே விளக்கம் கொடுக்க முயல்வது அபத்த காரியம். அதிக விவரணை தராமல் புள்ளிகள் மட்டும் வைத்துச் செல்வதை உத்தியாக எடுத்துக் கொண்டிருப்பதால் உங்கள் பார்வையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் 🙂
ரா.கிரிதரன் 6:25 பிப on ஜூன் 16, 2009 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கள். நன்றாக இருந்தது கதை – முடிவு பிடிபட சிறிது நேரம் ஆனது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ரா.கிரிதரன்.
சத்யராஜ்குமார் 9:06 பிப on ஜூன் 16, 2009 நிரந்தர பந்தம் |
மிக்க நன்றி கிரிதரன். பாலா குறிப்பிட்ட உங்கள் கதை படிக்க செறிவாய் இருந்தது.
தமிழ் பிரியன் 10:02 முப on ஜூன் 22, 2009 நிரந்தர பந்தம் |
நல்லா எழுதி இருக்கீங்க… 🙂
சத்யராஜ்குமார் 10:04 முப on ஜூன் 22, 2009 நிரந்தர பந்தம் |
நன்றிங்க தமிழ் பிரியன்!
dhamayanthi 6:18 முப on ஜூன் 23, 2009 நிரந்தர பந்தம் |
anegama ungaluku thaan parisu kidaikum pooliru!!
vaazhthukal
1111111111
dhamayanthi 6:18 முப on ஜூன் 23, 2009 நிரந்தர பந்தம் |
anegama ungaluku thaan parisu kidaikum pooliru!!
vaazhthukal
சத்யராஜ்குமார் 6:24 முப on ஜூன் 23, 2009 நிரந்தர பந்தம் |
வாங்க தமயந்தி. வாழ்த்துக்கு நன்றி.
கே.ரவிஷங்கர் 10:53 முப on ஜூன் 23, 2009 நிரந்தர பந்தம் |
கதை நல்லா இருக்கு.கடைசித் திருப்பம் வித்தியாசமான கோணம்.இல்லாவிட்டால் வழக்கமான கதை ஆகியிருக்கும்.
கதையில் குறை: அப்பா தனியா இருந்து கஷடபடுவார் எனற் கரிசனத்தை சொல்வதை உரையாடலில் கொண்டு வந்திருக்கலாம்.வேறு கோணமே வருகிற்து.
மைய விலக்கு என்பது centrifugal force என்ற அர்த்ததில்
வருகிற்து என்று நினைக்கிறேன்.மையத்தை விட்டு விலகுதல்
சத்யராஜ்குமார் 11:00 முப on ஜூன் 23, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரவிஷங்கர். இந்த விஷயம் பற்றி ரொம்ப நாளாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த முடிவு தோன்றிய பிறகுதான் எழுதி முடிக்க முடிந்தது. centrifugal – சரியே!
Kalpagam 6:50 முப on ஜூன் 30, 2009 நிரந்தர பந்தம் |
அருமையான கதை! வாழ்த்துகள்!
இனி வரும் தலைமுறைகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம் எனக் கொள்ளலாம். இப்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் உறவு, நட்பு எல்லாம் பணத்தோடு போட்டி போட முடியாமல் பின் தங்கி விட்டன.
சத்யராஜ்குமார் 5:03 பிப on ஓகஸ்ட் 6, 2009 நிரந்தர பந்தம் |
Kalpagam, உங்கள் கருத்துக்கு நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்க.
subhashreeramakrishnan 12:33 முப on ஜூலை 1, 2009 நிரந்தர பந்தம் |
too good…especially the end…while reading i never thought it will end like this. too good.
சத்யராஜ்குமார் 5:27 முப on ஜூலை 1, 2009 நிரந்தர பந்தம் |
subhashreeramakrishnan, பாராட்டுக்கு நன்றி.
கதை vs தொழில்நுட்பம் « இன்று – Today 11:17 பிப on ஜூலை 2, 2009 நிரந்தர பந்தம் |
[…] சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட […]
என். உலகநாதன் 9:32 பிப on ஜூலை 21, 2009 நிரந்தர பந்தம் |
அருமையான கதை.
சத்யராஜ்குமார் 8:00 பிப on ஜூலை 26, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி உலகநாதன்.
சீமாச்சு 11:08 பிப on ஓகஸ்ட் 7, 2009 நிரந்தர பந்தம் |
கதை போட்டியில் வெற்றி பெற்றமைக்குப் பாராட்ட்டுக்கள் !!
அன்புடன்
சீமாச்சு..
சத்யராஜ்குமார் 4:20 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
சீமாச்சு, நன்றி.
வெண்பூ 11:16 பிப on ஓகஸ்ட் 7, 2009 நிரந்தர பந்தம் |
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் சத்யராஜ்குமார்.. அருமையான களத்தில் அழகான நடை. அற்புதமான முடிவு என்று ஒரு பர்ஃபெக்ட் சிறுகதை, பாராட்டுகள்..
சத்யராஜ்குமார் 4:21 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
வெண்பூ, கதை பற்றிய உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
ரெஜோ 1:51 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
வாழ்த்துகள் நண்பரே ! 🙂
சத்யராஜ்குமார் 4:22 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரெஜோ.
RV 3:52 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
சத்யராஜ்குமார் 4:22 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
RV, வாழ்த்துக்கு நன்றி.
Dubukku 11:47 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
அருமையான கதை. பரிசுக்கு வாழ்த்துகள்.
தலைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது…கல்க்கிட்டீங்க
சத்யராஜ்குமார் 11:55 முப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
Dubukku, நன்றிங்க. ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிங்க?
Nalina 3:40 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
Very good story! Perumpaanmaiyaana kudumbangaL ethirnokkum prachchanai ithu. Aazhntha vivaathangaLai uruvaakka veNdum.
NanRi
nalina
சத்யராஜ்குமார் 3:52 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
Nalina, இது முடிவில்லாத அல்லது தீர்வு காண சிக்கலான பிரச்சனைதான். உங்கள் கருத்துக்கு நன்றி.
யாத்ரா 4:52 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
கதை ரொம்ப நல்லா இருக்குங்க
வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 5:04 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
மிக்க நன்றி யாத்ரா!
சித்ரன் 8:25 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
போட்டியில் தேர்வானதற்கு வாழ்த்துக்கள் SRK.
சத்யராஜ்குமார் 8:26 பிப on ஓகஸ்ட் 8, 2009 நிரந்தர பந்தம் |
சித்ரன், நன்றி.
சேரல் 6:43 முப on ஓகஸ்ட் 9, 2009 நிரந்தர பந்தம் |
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
சத்யராஜ்குமார் 6:47 முப on ஓகஸ்ட் 9, 2009 நிரந்தர பந்தம் |
மிக்க நன்றி சேரல்!
ரா.கிரிதரன் 8:01 முப on ஓகஸ்ட் 9, 2009 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கள். பாஸ்டன் பாலாஜி தன் வலைப்பதிவில் போட்டபோதே படித்தேன். நல்ல நடை, கதையின் முடிவு வித்தியாசமாய் இருந்தது.
ரா.கிரிதரன் (கதைல வந்தவன் இல்லை!)
சத்யராஜ்குமார் 8:04 முப on ஓகஸ்ட் 9, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி கிரிதரன்.
//(கதைல வந்தவன் இல்லை!)//
ஹாஹா. 🙂
Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews « Snap Judgment 12:13 முப on ஓகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் |
[…] மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமா…: “”பரிந்துரை முன்பே எழுதியாச்சு […]
Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews « Snap Judgment 12:24 முப on ஓகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் |
[…] மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமா…: பரிந்துரை முன்பே எழுதியாச்சு […]
Uzhavan 1:24 முப on ஓகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் |
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் 🙂
சத்யராஜ்குமார் 5:05 முப on ஓகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் |
நன்றிங்க உழவன்!
MOTHILAL 11:53 பிப on செப்ரெம்பர் 30, 2010 நிரந்தர பந்தம் |
good
ப.செல்வக்குமார் 5:41 முப on மார்ச் 4, 2011 நிரந்தர பந்தம் |
முதல்ல இருந்து சாதரணமா வந்து கடைசி வரிகளில் ஒரு சிலிர்ப்பு வருதுங்க ..
சத்யராஜ்குமார் 9:30 முப on மார்ச் 11, 2011 நிரந்தர பந்தம் |
கருத்துக்கு நன்றி செல்வா.