Updates from ஜூலை, 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 6:31 am on July 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    கடல் கடந்தவன் 

    அமெரிக்கா வந்த புதிதில் இங்கே பிச்சைக்காரர்களைப் பார்க்கையில் ஆச்சரியமாயிருந்தது. பணக்கார நாடு என்றே படித்து வந்ததும், இங்கே பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக மீடியாக்கள் பிம்பம் தந்திருந்ததும் காரணமாயிருக்கலாம்.
    beggar
    வாய்ப்புகளை வாரி வழங்கும் பூமியில் ஏன் இவர்களுக்கு இந்த நிலைமை என்று அந்த ரோட்டோர பிச்சைக்காரர்களைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. ஒரு டாலருக்காக துப்பாக்கி எடுத்து சுடக் கூட செய்வார்கள் என்று நண்பர்கள் எச்சரிக்கை செய்த போது, மனசுக்குள் திடுக்கென்றிருந்தது. வீடில்லா அந்த விளிம்பு நிலை ஆட்களிடம் இசகு பிசகாக மாட்டிக் கொண்டு மீண்ட நண்பர்களின் கதையை கேட்கும்போது த்ரில்லர் படித்ததைப் போல மயிர்க்கூச்செரிந்தது.

    அதற்கப்புறம் நான் வேலை பார்க்க நேர்ந்த எந்த ஒரு down town-மே பகலில் அழகாக தெரிந்தாலும், பின்னிரவிலும், விடிகாலையிலும் ஒரு அமானுஷ்யம் கலந்த பயத்தை அளித்தது. அவ்வப்போது இரவில் நடைபெறும் பெரு நகர துப்பாக்கி சூடுகள் பற்றி செய்திகளில் படிக்கும்போது கொஞ்சம் அபத்திர உணர்ச்சி சில வினாடிகளுக்கு நெஞ்சில் தோன்றும்.

    இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் வேலை, நண்பர்கள், கேளிக்கைகளுக்கு இடையே அவ்வப்போது இழையோடிச் செல்லும் இந்த மெல்லிய பய உணர்ச்சியை ஒரு கதையில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது ‘கடல் கடந்தவன்’.


    கடல் கடந்தவன்
    ~ சத்யராஜ்குமார் ~


    அவன் கண்கள் ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.

    சாலையோரமாய் இருந்த பேக்கரி அருகே சுவரில் தன்னை முட்டுக் கொடுத்து நின்றிருந்தான். இடது கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம் சில்லரைகள். கிழிந்த சர்ட்டிலும், பேன்ட்டிலும் சுரண்டினால் வருமளவுக்கு அழுக்கு. எத்தனை கூட்டத்திலும், யாரையும் பார்த்து விடுமளவுக்கு உயரமாக இருந்தான். கை கால்கள் குச்சி குச்சியாய் இருந்தன. ஒடுங்கின முகத்தில் துவங்கிய மீசையும், தாடியும் நெஞ்சு வரை நீண்டன. எண்ணெய் காணாமல் பழுப்படித்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடந்த பரட்டைத் தலைமுடி. பிளந்திருந்த தடிமனான உதடுகளுக்குள் மஞ்சளாய் கறை படிந்த பற்கள். மேலுதட்டையும், கீழுதட்டையும் தொட்டுக் கொண்டு பளபளத்தன ஓரிரு எச்சில் கம்பிகள்.

    மேலும் படிக்க…


     
    • Periyasamy 7:58 முப on ஜூலை 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆக்லாந்தின் “Down Town”ல் இருந்த போது இப்படி ஒரு பயத்தினுடனே வாழ்ந்தது உண்டு.

    • என். உலகநாதன் 1:41 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்த கதையில் நீங்கள் சொல்ல வருவது என்ன? என்பதே எனக்கு புரியவில்லை.

      • சத்யராஜ்குமார் 6:18 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        உலகநாதன், மேலே பெரியசாமியின் பின்னூட்டத்தை பார்க்கவும்.

        • என். உலகநாதன் 2:14 முப on ஜூலை 29, 2009 நிரந்தர பந்தம்

          பெரியசாமியின் பின்னூட்டத்தை படித்தேன்.

          உங்கள் கதையில் அதே பிச்சைக்காரன் எப்படி சென்னை வந்தான்?

          நீங்கள் (நாயகன்) பணம் போட்டதூம் ஏன் அவன் ஓடினான்?

          நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?

          பயத்துடனே வாழ்வதற்கும், இந்த கதையின் முடிவிற்கும் என்ன சம்பந்தம்?

    • seidhi valaiyam 6:08 முப on ஜூலை 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Hi

      உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

      உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

      நட்புடன்
      செய்திவளையம் குழுவிநர்

    • Gowtham 8:45 முப on ஜூலை 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Fantastic Sathya, :).

      Laughed out loudly while reading these…
      “அதில் ஒரு செய்தி அல்லது மிரட்டல் நிச்சயம் இருந்தது. அந்த செய்தி எனக்கு மட்டும்தானா?”

      “அந்த கறுப்பு பிச்சைக்காரன் மாலையிலும் ஆணியடித்து நிறுத்திய கட்அவுட் மாதிரி அங்கேயே நிற்கிறான்”

      ”நீயுண்டு உன்னோட வேலை உண்டுன்னு இரு. அநாவாசியமா அங்கேயும் இங்கேயும் அலையாதே.”

      “யு.எஸ்ல சில இடங்களில் நேரம் காலம் தெரியாம எசகு பிசகா மாட்டிகிட்டா என்ன வேணா நடக்கும்ன்னு எனக்கும் தெரியும்.நீ எதுக்கும் பாக்கெட்ல ஒரு டாலர் நோட்டு வெச்சிக்கோ. அந்த பிச்சைக்காரன் வழி மறிச்சா அதை நீட்டிடு. வாங்கிட்டு பேசாம போயிருவான்.”

      ”ஸாரி ஹரி.” என்று சொன்ன என் குரலில் கொஞ்சம் கூட வருத்தமேயில்லை. குலுக்கி விட்டு உடைத்த கோக் பாட்டிலைப் போல் மனசுக்குள் உற்சாகம் பீய்ச்சியடித்தது.

      “அதே பரட்டைத் தலை. அதே தாடி மீசை. கிழிந்த ஆடை. ஒடுங்கிய கன்னம். டார்ச் லைட் கண்கள். அவன் எங்கே இங்கே வந்தான்? ”

      “காலையில் கூகிளில் போட்டுப் பார்த்த கன்வர்ஷன் ரேட் ஞாபகம் வந்தது.

      ”நாயர், இருபத்தஞ்சு காசு சில்லரை இருக்கா?”

      Enjoyed reading

    • சத்யராஜ்குமார் 12:09 பிப on ஜூலை 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உலகநாதன், உங்கள் கேள்விகள் நியாயமானவை. அந்த கேள்விகளை மனதில் எழுப்புவதே கதையின் நோக்கம். அதற்கு விடை நான் சொல்லக் கூடாது. 🙂

    • இரா. செல்வராஜ் 8:55 பிப on ஜூலை 29, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கலக்கலான முடிவு. நான் கூட, சட்டையினுள் வைத்திருந்த ஒரு டாலர் இன்னும் அப்படியே இருக்க, அதைக் கொடுத்தால் செல்லாதே என நினைத்துக் கொண்டே படித்தேன். நாயரிடம் வாங்கிய சில்லரையும், கூகுளில் பார்த்த கன்வர்சனும்… அருமை.

    • Dubukku 5:55 பிப on ஓகஸ்ட் 22, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல கதை…அருமையான நடை.

      இங்கேயும் (லண்டனில்) அதே கதை தான்…சில சமயம் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்து பயந்து காசு குடுத்து ஆளை விட்டால் போதும் என்று ஓடியிருக்கிறேன் :))

      • சத்யராஜ்குமார் 5:50 பிப on ஓகஸ்ட் 24, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        @Dubukku:

        நன்றி. 🙂 காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்த மாதிரி, இயற்கை உபாதைக்காக கழிப்பிடமுள்ளே போய், செத்தோம் பிழைத்தோம் என்று வந்த கதைகளும் கேட்டுள்ளேன். நேரம் நல்லா இருக்கணும். கேட்ட எல்லாத்தையுமே கலந்து கட்டி எழுத முடிவதில்லை.

  • சத்யராஜ்குமார் 7:37 am on July 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    பாண்டேஜ் 

    நாலு பிளாக் தள்ளி வசிக்கிறார். இந்தியாவிலிருந்து வந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை. பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் மனைவியும், குழந்தைகளும் வந்து சேர்ந்தார்கள். வாஷிங்டன் டி.சியில் ஆபிஸ் போகிற நேரம் சாலையை கடக்கையில் பைக் மோதியது. பலத்த அடி. காலில் ப்ராக்சர். வந்து மோதிய பைக் ஆசாமிக்கும்தான்.

    எமர்ஜென்சி வாகனங்கள் உடனே வந்து விட்டன. அருகில் உள்ள GW மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சர்ஜரி நடந்தது. இந்த மாதிரி இக்கட்டான நிலையில் இந்தியாவில் நம் சொந்த ஜனம் பூராவும் கூடி விடும். தார்மீக ஆதரவு நிறைய கிடைக்கும். இங்கே யார் இருக்கிறார்கள்? முடிந்தால் நாலு நண்பர்கள் மாலையில் வந்து பார்க்கக் கூடும்.

    இது பிரசவத்துக்கும் பொருந்தும். என்னுடைய பல நண்பர்களின் பெற்றோர்களுக்கு விசா கிடைக்காததினால் பெரியவர்கள் பக்க பலம் இல்லாமல் தன்னந்தனியாய் குழந்தையைப் பெற்று, அதை வளர்ப்பது எப்படி என புத்தகம் படித்து வளர்த்திருக்கிறார்கள். முதலில் யோசிக்க மலைப்பாக இருந்தாலும், ஆஸ்பத்திரியாகட்டும், அங்கே பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களாகட்டும், மற்ற பொதுத்துறை அலுவலகங்கள் மக்களை அக்கறையாய் அணுகுகிற முறை… படிப்படியாய் குழந்தைக்கு சொல்லித் தருவது போல் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கற்றுத் தருகிற பொறுமை… இங்கே அதற்குரிய அமைப்புகள் பலமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அது சுலபமாகி விடுகிறது. தீவுகளாக வாழும் இவர்கள் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். (வரியாகவும், காப்பீட்டுத் தொகையாகவும் பெரும் பணம் கட்டுகிறோம் என்பது ஒருபுறமிருந்தாலும், அது சரியாய் செலவழிக்கப்படுவது ஆறுதல்)

    அடிபட்ட நண்பருக்கு வருவோம். அவர் மனைவி ஊருக்கு புதிதாக இருந்தாலும் தனியாக, தைரியமாக சமாளித்திருக்கிறார். காலில் இரண்டு மூன்று இடங்களில் பிளேட் பொருத்தியிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பிசியோ தெரபி எடுத்துக் கொண்டால் தேறி விடுவார் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    நான் போய் பார்த்த போது – வலியின் தாக்கத்தில், மருந்துகளின் வீரியத்தில், நிறைய ரத்தமிழந்த பலவீனத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகளை தெரிவித்தேன். வீட்டுக்கு வந்த பின், ஆஸ்பத்திரி வாசனை அகலும் முன் நான் எழுதிய சிறுகதை பாண்டேஜ்!


    பாண்டேஜ்!
    ~ சத்யராஜ்குமார் ~


    என்னைச் சுற்றி கொழகொழவென ரத்தம்.

    நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தேன். வேகமாய் கண்களில் பரவியது இருள். பென்சில்வேனியா தெருவை பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் கடக்க முயலும் போது, தேங்கிக் கிடந்த கார்களுக்கு நடுவே திடீரென முளைத்த மோட்டார்பைக்கை நானும், நடந்து செல்லும் என்னை பைக் ஆசாமியும் பார்த்து அதிர்ச்சியடைந்ததுதான் தெரியும்.

    அடிபட்ட நானும், அடித்த அவனும் பெரிய ஓலத்தோடு ரத்தம் சிதற ஆளுக்கொரு திசையில் தெறித்தோம்….

    தொடர்ந்து வாசிக்க…

     
    • என். சொக்கன் 10:09 முப on ஜூலை 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சத்யராஜ்குமார்,

      ’சுருக்’கமான ஒரு கதைக்குள் எத்தனையோ விஷயங்களைச் சொல்லிவிட்டீர்கள், டபுள் பொருத்தமான டைட்டில்முதல் விறுவிறு நடைவரை சகலமும் அழகு – பாராட்டுகள்!

      ஆனால், இந்த முன்னுரையோடு படித்தால் கதை இன்னும் அழுத்தமாகத் தோன்றுவது ப்ளஸ்ஸா மைனஸா? அதுதான் தெரியவில்லை 🙂

      – என். சொக்கன்,
      பெங்களூர்.

    • சத்யராஜ்குமார் 11:04 முப on ஜூலை 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சொக்கன்,

      பாராட்டுக்கு நன்றி. தமிழில் எழுதும்போது கிடைக்கும் மறு அர்த்தத்தை கவனித்து எழுதியதற்கு எக்ஸ்ட்ரா நன்றிகள். 🙂

      கதையின் சில பகுதிகள் முன்னுரையில் வந்து விட்டதால் சற்றே சுவாரஸ்யம் குறைந்ததாக என் மனைவி குறிப்பிட்டார். நடந்த சம்பவம் சற்றே துரதிர்ஷ்டவசமானது என்பதால் அதைப் பற்றி சரியான தொனியில் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தது.

    • சித்ரன் 12:38 பிப on ஜூலை 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் பதிவில் சொல்ல நினைத்த எல்லா அம்சங்களும் விலாவாரியாக எழுதப்பட்ட சிறுகதைக்குள்ளேயே உணர முடிந்தது. ஒன்றின் சுவாரஸ்யத்தை மற்றொன்று குறைப்பது போலத்தான் தோன்றுகிறது. பதிவு அல்லது சி.கதை இதில் எதாவது ஒன்று மட்டும் போதுமானதாக இருந்திருக்கலாம்.

    • சத்யராஜ்குமார் 1:04 பிப on ஜூலை 18, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சித்ரன்,

      நீங்கள் சொல்வது உண்மைதான். சமீப காலமாக ஒரு விஷயத்தின் இரண்டு பரிமாணங்களை முயன்று வருகிறேன். ஒன்றின் சுவாரஸ்யத்தை இன்னொன்றில் இழக்காமல் பார்த்துக் கொள்வது சவால்தான். இந்த குறிப்பிட்ட நிகழ்வில் உள்ள விபத்து கற்பனையாய் இருந்தால் கதையில் இஷ்டத்துக்கு விளையாடி இருப்பேன். இது உண்மை எனும்போது, நிறைய எல்லைகள்.

      இனி வரும் பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன். நன்றி.

    • REKHA RAGHAVAN 9:54 பிப on ஜூலை 19, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையான கதை. விறுவிறுப்பான நடை. ஒரு விபத்தை கேள்விப்பட்டு அதை உங்கள் பாணியில் விவரித்து கடைசியில் நச்சுன்னு முடிச்சிருப்பது உங்கள் டச்.

      ரேகா ராகவன்

    • சத்யராஜ்குமார் 8:19 முப on ஜூலை 20, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ரேகா ராகவன், உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

    • செல்வராஜ் 10:53 பிப on ஜூலை 24, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சித்ரன் சொன்னது போலவே தான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் ஒரு கதை எழுதுவது எவ்வளவு சிக்கலான விசயம் என்பதை அண்மையில் உணர்ந்து வருகிறேன். அவற்றையும் மீறி பட்பட்டென்று எழுதிவிடுகிறீர்கள் என்பது வியப்பாகவும் இருக்கிறது.

  • சத்யராஜ்குமார் 11:54 am on July 12, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு 

    அமெரிக்காவில் கிடைக்கும் நிறைய ‘முதல்’களில் முதல் நெடுந்தொலைவு கார்ப் பயணம் மறக்க முடியாதது. இந்த அனுபவத்தை சிறுகதையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்த எனக்கு, “ஜெமோ-வை சந்திக்கலாம் வாங்க!” என்று பாஸ்டன் பாலா குறுஞ்செய்தி அனுப்பியபோது சட்டென ஸ்பார்க் ஆனது ஒரு கரு.

    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு – என்ற அந்த சிறுகதை நான் நினைத்தது போலவே பலருக்கும் தங்கள் முதல் road trip நினைவுகளை கிளறி விட்டிருக்கிறது என்பதை ஒருபக்கம், srikan2 ஆகிய ட்விட்டர் நண்பர்களின் ட்வீட் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகிறது.

    ஒரு முக்கிய குறிப்பு. கதையில் வரும் பாத்திரங்களை யாரோடும் முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம். பெரும்பாலான ஐ.டி இளைஞர்களின் இலக்கிய பார்வையும், சாலைப் பயண அனுபவமும் மட்டுமே இந்த கதை தாங்கி நிற்கும் விஷயங்கள்.

    கதை கீழே…


    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

    ~ சத்யராஜ்குமார் ~


    காருக்குள் கலர் கலராய் வெளிச்சமடிக்க, ”டேய் கோபி, போலீஸ்டா!” – செல்போனில் அலறினேன். நட்ட நடுநிசியில் 95 நெடுஞ்சாலையில் விர் விர்ரென பறக்கும் இத்தனை கார்களுக்கு நடுவில் – தட்டுத் தடுமாறி ஓட்டிச் செல்லும் நானா கிடைத்தேன்?

    ”பதறாதே. ஓரங்கட்டி நிறுத்து.” என்று ஆலோசனை வழங்கினான் கோபி.

    ”இலக்கியம் வெங்காயமெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லயே சொன்னேன். கேட்டியா நீ?”

    மேலும் படிக்க…

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி