கர்ணம்
நண்பர் பாஸ்கரனை நேற்று சந்தித்தேன். பொறியியல் பேராசிரியரான அவருக்கு கணிதத்தில் அலாதி ஈடுபாடு. அகிலிடம் அவனது 7th கிரேடு கணிதம் பற்றி விசாரித்தவர், அவன் பித்தாகரஸ் தியரம் பற்றி சொன்ன போது அதை நிறுவிக்காட்டுமாறு கேட்டார். செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் a மற்றும் b எனில், அதன் கர்ணம் c -ஐ கண்டறிய உதவும் கீழ்க்கண்ட சமன்பாடு பித்தாகரஸ் என்னும் கணித மேதை நிறுவியது.
a2 + b2 = c2
நான் படிக்கிற காலத்தில் இதை அப்படியே உருப்போடச் சொல்லி விட்டார்கள். ஆனால் அகிலுக்கு அப்படி இல்லை. அவனால் கீழே உள்ள படம் போல வரைந்து உடனே அதை நிறுவிக்காட்ட முடிந்தது.
தொடர்ந்து பாஸ்கரன் செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்னும் hypotenuse-ஐ கண்டறிய பல வழிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நம் பழந்தமிழர் கண்டு பிடித்தது என்றும் சொன்னார். சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்தத் தமிழ்ப்பாடலில் அந்த வழி முறை சொல்லப்பட்டுள்ளது.
ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி
குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே.
( a – (a/8) ) + (b/2) = c
என்பதே அந்தப் பாடல் சொல்லும் சமன்பாடு. நீளமான பக்கத்தை எட்டாய்ப் பிரித்து, அதில் ஏழு கூறுகள் நீளத்தை எடுத்துக் கொண்டு, அதனுடன் உயரத்தில் பாதியைக் கூட்டினால் கிடைப்பது கர்ணத்தின் நீளம். 4-ஐ எட்டாகப் பிரித்தால் 0.5. அதைக் கழிக்க 4 – 0.5 = 3.5. அதனுடன் உயரத்தில் பாதியை (3/2 = 1.5) கூட்டினால் 3.5 + 1.5 = 5 கிடைப்பது கர்ணம்!
இது போன்ற கணிதப் பாடல்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா? யாருக்கேனும் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.
Tweets that mention கர்ணம் « இன்று – Today -- Topsy.com 9:56 பிப on செப்ரெம்பர் 5, 2010 நிரந்தர பந்தம் |
[…] This post was mentioned on Twitter by KSRK, சங்கமம். சங்கமம் said: கர்ணம்: …செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்னும் hypotenuse-ஐ கண்டறிய பல வழிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நம் ப… http://bit.ly/aRV3Q8 […]
காஞ்சி ரகுராம் 10:45 பிப on செப்ரெம்பர் 5, 2010 நிரந்தர பந்தம் |
ஆஹா, படிச்சாலே மனசு குட்டிக் கர்ணம் அடிக்குது. நண்பர் பாஸ்கரனிடத்திலும் பாடல்களின் தொகுப்பு இல்லையா?! கணிதப் பாடல் புதையலை நம்மில் யாராவது தேட முயற்சிப்போம்.
சத்யராஜ்குமார் 6:24 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
அவரிடம் அப்போது மற்ற பாடல்கள் பற்றி கேட்கவில்லை.
வாணி 6:18 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் |
பத்தாங்கிளாஸ்ல படித்த தேற்றம் :)))
நினைவூட்டியமைக்கு நன்றி
சத்யராஜ்குமார் 6:25 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
வாணி, நன்றி.
செ செ 7:28 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் |
எங்கே தொலைத்தோம் இது போன்ற நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை..! பெருமையான தகவல். நன்றி. .
சத்யராஜ்குமார் 6:30 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
செ செ, நன்றி. இது போன்ற கணக்கீடுகளை தஞ்சை கோயிலை ஒத்த கோபுரங்களின் கலசங்கள் ஏற்ற மணல் மேடு எவ்வளவு நீளத்திற்கு எழுப்ப வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தினராம் நமது முன்னோர்கள்.
மீனாட்சிசுந்தரம் 9:39 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் |
கர்ணம் என்ற வார்த்தையே மறந்து போயிருந்தது சத்யராஜ்குமார்.
சடாரென்று பள்ளிநாட்களை நினைவுகளில் வரச்செய்து விட்டீர்கள்…!
சத்யராஜ்குமார் 6:31 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
எல்லாருக்குமே 10-ங்கிளாஸ் ஞாபகம் வந்துருச்சே!
சு. க்ருபா ஷங்கர் 3:38 பிப on ஒக்ரோபர் 11, 2010 நிரந்தர பந்தம்
பத்தாங்க்ளாஸ்ல எனக்குக்கூட என்னமோ இந்த பேர்ல ரெண்டுமூணு பக்கத்துல படமெல்லாம் போட்டுருந்த மாதிரி ஞாபகம் வருது. ச்சே, அதுல என்ன எழுதியிருக்குன்னு அப்பவே படிச்சுத்தொலைஞ்சுருக்கலாம்.
பத்மநாபன் 12:54 பிப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் |
பிதாகரஸின் செங்கோண முக்கோண சூத்திரம் ஒன்பது ,பத்து வகுப்புகளில் புரிந்தவுடன் கிடைத்த சந்தோசம் இதுவரை கிடைக்கவில்லை …இந்த தேற்றத்தை தவிர அனைத்தும் நினவை விட்டு ஓடி விட்டன . நல்ல பகிர்வு.. கர்ண ப்பாடல் அற்புதம்.. நிச்சயமாக இன்னமும் பாடல்கள் இருக்கும் . தேடிப்பிடிப்போம்.
சத்யராஜ்குமார் 6:31 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பத்மனாபன். லட்சுமணனை தொடர்பு கொள்ள முடிந்ததா?
பத்மநாபன் 11:04 முப on செப்ரெம்பர் 29, 2010 நிரந்தர பந்தம்
சத்யா…லட்சுமணோடு விரைவில் பேசவேண்டும்…
நன்றி…
Gowtham 11:28 பிப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் |
Thanks for this interesting info… just browsed and stumbled upon this lines…”As a poet, he could not however, resist an urge to write poems with mathematical themes. Two such poems appear in this collection (Math in Matrimony). The best of his effusions on mathematics – “Calculus and Narasimha Avataram” is unfortunately not available. But my brother Rangan (Andy Sundaresan) has succinctly presented the central idea. [12]
http://www.vindhiya.com/kns/kns_intro_Nannu1-white.html
சத்யராஜ்குமார் 6:33 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
Thanks for sharing the link.
கார்த்திக் 12:46 பிப on செப்ரெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் |
நம்ம ஊர் கல்வி அமைப்பை இந்த மாதிரி பிரிட்டீஷ் உருவாக்கி சென்று விட்ட பின்பு, நாமும் அப்படியே பின் தொடர்கிறோம்…வரும் சந்ததியாவது மாற வேண்டும்…
சத்யராஜ்குமார் 6:36 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
கார்த்திக், கருத்துக்கு நன்றி. புதியனவற்றை வரவேற்கும் அதே நேரத்தில் பழையனவற்றின் மதிப்பையும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளல் பயன் தரும்.
RV 3:08 பிப on செப்ரெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் |
If we rotate the right triangle described here by 90 degrees, then we get a triangle with a base of 3 and height of 4. Applying the formula, hypotenuse is 3 * 7 / 8 + 4/2 = 4.625, which is clearly off. The formula is interesting as a historical and (inaccurate) attempt to estimate the hypotenuse, and not useful mathematically!
சத்யராஜ்குமார் 8:00 பிப on செப்ரெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் |
RV, the poem asks us to always take the longer leg (ஓடிய நீளந்தன்னை) to divide by 8, not the shorter one, no matter how we rotate, the leg 4 is longer than 3.
MOTHILAL 12:14 முப on செப்ரெம்பர் 23, 2010 நிரந்தர பந்தம் |
Arumai mega arumai………………………….
சத்யராஜ்குமார் 6:36 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி.
தகடூர் கோபி 3:07 முப on செப்ரெம்பர் 23, 2010 நிரந்தர பந்தம் |
கர்ணம் கண்டுபிடிக்கும் சமன்பாடுகளும் பாடல் விளக்கங்களும் அருமை.
நான் படித்த காலத்தில் இது போல அருமையாக சொல்லிக் கொடுக்காவிட்டாலும் கணக்கு எனக்கு நன்றாகவே புரிந்தது. அப்போதும் இப்போதும் எனக்கு பிடித்த பாடங்களில் கணக்கும் ஒன்று.
கர்ணம் என்றால், கணக்கை தப்பாக போடும் போது கணக்கு வாத்தியார் என் காதைப் பிடித்து திருகி தலையில் குட்டியது தான் நினைவுக்கு வருகிறது (கர்ணம் – வடமொழியில் காது)
சத்யராஜ்குமார் 6:37 பிப on செப்ரெம்பர் 28, 2010 நிரந்தர பந்தம் |
🙂 எல்லா கணக்கு வாத்தியார்களும் ஒன்று சொன்னாற்போல காதையே திருகுகிறார்களே!
கா. சேது 1:52 பிப on ஒக்ரோபர் 6, 2010 நிரந்தர பந்தம் |
எல்லா பொதுவான a, b எண்களுக்கும் இச் சமன்பாடு சரியாகாது.
காட்டாக a=2, b=1 எனில் c=வர்க்க மூலம் (5) . ஆனால் சமன்பாட்டின் படி c= 2×7/8 + 1/2 = 9/4 = 2.25!
வர்க்க மூலம் (5) ஆனது வகுபடா எண் (irrational number) = 2.2360…..
அடுத்ததாக a,b,c மூன்றும் முழு (integer) எண்களாகவும் பைத்தகோரியன் மும்மை (Pythagorean Triple) ஆகவும் இருக்கையிலும் அத்தகைய எல்லா மும்மைகளுக்கும் சமன்பாடு பொருந்தாது. நான் இதை நிறுவிக்காட்டியுள்ளேன் பின்வரும் பக்கத்தில் :
விகிதம் a/b ஆனது 4/3 அல்லது 12/5 என இருப்பினே c = (a-a/8)+b/2 சமன்பாடு சரியான விடை தருகிறது. – [4,3,5] மற்றும் [12,5,13] ஆகியன. மாற்றாக, [24,7,25] க்கு விடை தவறுகிறது.
அவ்வாறு சமன்பாடு தரும் தவறான விடைக்கும் சரியான எண்ணிற்கும் உள்ள வேறுபாடு ஒரு மட்டுக்குட்பட்டதா, அதனால் இச் சமன்பாட்டை ஒரு தோராயத்துக்குப் பயன்படுத்தலாமா என்பன பற்றி நான் அலசவில்லை இதுவரை.
பின்வரும் பக்கங்களில் உள்ள பைத்தகோரியன் மும்மைகளை சோதிதித்துப் பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Pythagorean_triple
http://www.math.uic.edu/~fields/puzzle/triples.html
சத்யராஜ்குமார் 5:40 பிப on ஒக்ரோபர் 7, 2010 நிரந்தர பந்தம் |
தங்கள் விளக்கத்துக்கு நன்றி. இந்த முறையின் inaccuracy பற்றி பாஸ்கரனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தால் அவரின் பதிலையும் இங்கு பதிவு செய்கிறேன்.
சு. க்ருபா ஷங்கர் 3:37 பிப on ஒக்ரோபர் 11, 2010 நிரந்தர பந்தம் |
“ஓடிய நீளந்தன்னை” வாய்ப்பாடு சூப்பரா இருக்கே. என்ன ஒன்னு, இதைப்புரிஞ்சுக்கவாவது பிதாகரஸ் தியரத்தை ஒழுங்கா படிச்சுருக்கலாம் சின்ன வயசுலன்னு தோணுது 😦
சத்யராஜ்குமார் 8:21 பிப on ஒக்ரோபர் 13, 2010 நிரந்தர பந்தம் |
**** கணிதப் பாடல்கள் – நவீன் குமரன் அனுப்பி வைத்த சுட்டி… ***
/*இது போன்ற கணிதப் பாடல்களின் தொகுப்பு எங்கேனும் உள்ளதா? யாருக்கேனும் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும். */
கீழ்க்கண்ட சுட்டியில் தாங்கள் கேட்ட அரிய நூலொன்று இருக்கிறது
http://www.thamizham.net/newunithamizham/jan2009/rare03-u8.htm
– நவீன் குமரன்