கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியா…
கல்கி 24.10.2010 தேதியிட்ட இதழில் வெளியான எனது ராட்சஸம் சிறுகதை குறித்து ஹொசூரிலிருந்து பாலுசாமி எழுதிய கடிதம்…
“ராட்சஸம்” படித்தேன். கதையின் எந்த அம்சத்தை முதலில் எடுத்துக்கொண்டு பேசுவது என்று தெரியவில்லை. அத்தனையும்
உயிரோட்டமான பதிவுகள். இல்லை இல்லை நிகழ்வுகள். எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மெசேஜின் சமூக நாட்டம், அதை சொல்லியிருக்கும் இயங்கியல் நடை, ஆங்காங்கே சில மருத்துவக் குறிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய அடையாளமாய் அந்த பொன்னம்மாக் கிழவியின் உயர்ந்த பண்பை மிக இயல்பாய் சொல்லியிருப்பது, வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இயங்கு முறை பிசகாமல் கண் முன்னால் கொண்டு வந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னாம்மா போன்ற கோடிக்கணக்கானவர்களின் சிறு தொழிலை விழுங்கி மேலாதிக்கம் செய்யும் ராட்சஸ பன்னாட்டு நிறுவனங்களை தோலுரித்திருப்பது என, இது ஒரு சிறுகதை வடிவமாக இருந்தாலும் ஒரு தலைமுறை நிகழ் போக்காகவும், படிப்பவரை அந்தச் சூழலோடும், கதைக்கு அப்பால் சொல்லி வரும் சம்பவங்களில் மூழ்கடித்து வெளி வர வைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதுதான் உழைக்கும் மக்களின் குரல். வாழ்த்துக்கள்!
ராட்சஸம் படிக்க…
http://kalkionline.com-ல் இலவசமாக பதிவு செய்து கொண்டு –
http://kalkionline.com/kalki/2010/oct/24102010/kalki0902.php என்னும்
சுட்டிக்கு செல்லவும்.
பின் இணைப்பு: கல்கி ஆன் லைனில் சென்று படிக்க இயலவில்லை என சில நண்பர்கள் தெரிவித்தனர். என்னுடைய தளத்திலும் இக்கதை படிக்கக் கிடைக்கும். சுட்டி: http://www.sathyarajkumar.com/monopoly
BALAJI 10:43 பிப on ஒக்ரோபர் 21, 2010 நிரந்தர பந்தம் |
உங்கள் கதை மிக அருமை இப்படியும் நடக்குமா என அதிர்ந்தேன்
வாழ்த்துக்கள்
சத்யராஜ்குமார் 7:22 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி. வெளிநாடுகளில் ந்டக்கிறது என அறிகிறேன். ஜிஎம்ஓ இந்தியாவில் பரவும்போது அங்கும் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
Tweets that mention ராட்சஸம் – கல்கி சிறுகதை « இன்று – Today -- Topsy.com 12:21 முப on ஒக்ரோபர் 22, 2010 நிரந்தர பந்தம் |
[…] This post was mentioned on Twitter by KSRK-சத்யராஜ்குமார், Chithran Raghu. Chithran Raghu said: RT @ksrk: ராட்சஸம் – கல்கி சிறுகதை >> இன்று – Today >> https://inru.wordpress.com/kalki-rakshasam/ […]
Venkat 6:43 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் |
மனதைக் குலுக்கிப் போட்டது இக்கதை. பாவம் பொன்னம்மா பாட்டி. சாப்பிடும் கற்காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை இவர்கள். தில்லியில் கூட தர்பூசணி பழங்களுக்கு சிவப்பு திரவங்களை இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தி மேலும் சிவப்பாக்குகிறார்கள்.
சத்யராஜ்குமார் 7:22 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி வெங்கட்!
REKHA RAGHAVAN 6:51 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் |
ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதைக் களம். சரளமான நடை. மொத்தத்தில் சுபர்ப்.
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார் 7:22 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி ராகவன் ஸார்!
பத்மா அர்விந்த் 7:42 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் |
அருமை. ஆனால் முடிவு ரொம்பவே சினிமாத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தொகையை கொடுத்து வாங்கிவிடுவதாக சொல்லி இருந்தால் நடைமுறையை ஒத்து இருக்குமோ என்னவோ.
சத்யராஜ்குமார் 7:26 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி. இங்கே அமெரிக்காவில் கூட ஜிஎம்ஓ விதைகள் சேகரிக்கப்படாமல் கண்காணிக்க உளவு ஏஜண்ட்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகள் நிறுவனங்களால் சட்டரீதியான மிரட்டலுக்கு உட்படுத்தப்படுவதாகப் படித்தேன். அதனடிப்படையிலேயே இது போன்ற நிகழ்ச்சி அமைத்தேன்.
சுப இராமனாதன் 4:30 முப on ஒக்ரோபர் 27, 2010 நிரந்தர பந்தம்
Food Inc என்ற 2008 ஆவணப்படத்தில் Monsanto போன்ற நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்கள் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன் நம்மூர் வேப்பமரம் சார் பொருட்களுக்கும், மஞ்சளுக்கும் இதே Monsanto காப்புரிமை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.
நாம் கவனிக்கும் ஒன்றை (கவனித்து, எளிதில் மறக்கும் ஒன்றை), குறிப்பெடுத்து, கதையாக்கம் செய்வதில் சத்யராஜ்குமாருக்கு நிகரிலர்!
All-Mart பெயர் – நல்ல தேர்வு.
நல்லதொரு கதை எழுதியமைக்கும், அது பிரசுரம் ஆகியதற்கும் வாழ்த்துகள்.
Vijay 8:50 முப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் |
நெஞ்சை தொட்ட கதை.
சத்யராஜ்குமார் 7:26 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி விஜய்.
செந்தில் 7:40 பிப on ஒக்ரோபர் 23, 2010 நிரந்தர பந்தம் |
வாழ்த்துக்கள் சத்யா. சுட்டியில் சென்று படிக்க முடியவில்லை (story link promting for login, though already logged in). படிக்க ஆவல், உதவி தேவை.
சத்யராஜ்குமார் 7:27 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி செந்தில். கீழே தந்துள்ள சுட்டியில் சென்று படியுங்கள்.
http://www.sathyarajkumar.com/monopoly
பத்மா அர்விந்த் 10:37 முப on ஒக்ரோபர் 24, 2010 நிரந்தர பந்தம் |
Saccharin பற்றீய வழக்கை சொல்கிறீர்களா? வருடங்கள் பல கடந்து விவசாயிக்கு சாதகமாகவே முடிந்தது. நிறைய பணபல நிறுவனங்கள் தோற்றன. நடட் ஈடு கொடுக்க வழக்கின் செலவு உட்பட தீர்ப்பாயிற்று.