சிறுகதை. சிக்கல்கள். [1]
எழுதுவது எப்படி என்று ஏராளமான கட்டுரைகள் வந்து விட்டன. வலைப்பதிவுகளிலும், வலைத்தளங்களிலும் பலரும் அவற்றைத் தொகுத்தும், சமைத்தும் போட்டு விட்டனர்.
எல்லாம் படித்த பின்னும் குழப்பமாயிருக்கிறதென்று எனக்கு எப்போதாவது வரும் ஒரு சில மின்னஞ்சல்கள் சொல்கின்றன. எப்படி சிறுகதை எழுதுவதென்று அரைத்த மாவை அரைக்க இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை.
சென்ற வருடம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வாஷிங்டன் டி.சி வந்த போது அவர் கதை எழுதும் முறை குறித்து சுருக்கமாய் சில நிமிஷம் பேசி அறிந்து கொள்ள முடிந்தது.
அதற்கும் நான் எழுதும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவருடைய தளம் வேறு, வீச்சு வேறு, பிராபல்யம் வேறு, இலக்குகள் வேறு என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சில நிமிஷ உரையாடல் இதை எழுதுவதற்கான யோசனையை அளித்தது.
அதாவது பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளில் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய நுட்பங்கள், வழிமுறைகள். கதைகளுக்கான என்னுடைய இண்ட்டர்னல் பிராசசிங் ப்ளோ பற்றி விலாவாரியாக எழுத உத்தேசம்.
இலக்கியத்தில் கரை கண்டவர்கள் நிரம்பி வழியும் இணையம் இது. அவர்களைப் போன்ற விற்பன்னர்களுக்கான கட்டுரை அல்ல. சிறுகதை என்னும் வடிவம் தமிழில் இறந்து விட்டதாக சொல்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கானதும் அல்ல.
அவ்வப்போது இணையத்தில் சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படும்போது ஒரு கூட்டம் உற்சாகத்தோடு கை தட்டி வரவேற்கிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கு பெறுகிறது. ஐம்பது, நூறு சிறுகதைகளை ஆவலுடன் படித்து விமர்சனம் எழுதவும் சிலரால் முடிகிறது.
இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதற்கு பிராணவாயு அளிப்பவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
பல எழுத்தாளர்களின் சின்னச் சின்ன அனுபவங்களை பேட்டிகளாய், துணுக்குகளாய் படித்த போதுதான் எனக்குள் சில கற்பனை சுவிட்சுகள் தட்டி விடப்பட்டன.
அதே மாதிரி இந்த மின்னல் குறிப்புகள் ஆர்வமுள்ள சொற்பம் பேரிடம் சில சுவிட்சுகளைத் தட்டி விடக் கூடும்.
[ தொடரும் ]
அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.
சித்ரன் 12:05 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
//இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. //
சரியாகச் சொன்னீர்கள்.
SRK: ஜனரஞ்சக இதழ்களில் நிறைய எழுதிப் பிரசுரம் கண்டபின்னரும் சரியான சிறுகதை வடிவம் என்பது என்ன என்கிற தேடல் கொண்டுள்ள எனக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் பயனளிக்கும். நல்ல ஆரம்பம். உங்கள் அனுபவப் பகிர்வைத் தொடருங்கள்.
சத்யராஜ்குமார் 6:12 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி சித்ரன். நான் எப்படி எழுதுகிறேன் என்றுதான் சொல்லப் போகிறேன். பல்வேறு சிறுகதை வடிவங்கள் பற்றிய அலசலுக்குள் போக விரும்பவில்லை.
காஞ்சி ரகுராம் 3:57 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
ஹையா, உங்கள் அரிச்சுவடிக்கு ஒரு மாணவனாய் கைகட்டி அமர்ந்தாச்சு. காத்திருக்கிறேன்.
சத்யராஜ்குமார் 6:13 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
ரகுராம், பாடமெல்லாம் இல்லிங்க. வெறும் அனுபவக் குறிப்புகள்.
காஞ்சி ரகுராம் 7:24 முப on ஜனவரி 25, 2011 நிரந்தர பந்தம்
அனுபவம் என்பதே ஒரு சிறந்த பாடம்தானே 🙂
பினாத்தல் சுரேஷ் 6:22 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
குறிப்புகளின் ஒரு பகுதியை ஏற்கனவே உபயோகித்து, பயன்பெற்றவன் என்ற விதத்தில், ஆவலோடு..
சத்யராஜ்குமார் 8:02 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி! மகிழ்ச்சி!
ராசா 6:36 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
waitingu 🙂
சத்யராஜ்குமார் 8:02 முப on ஜனவரி 24, 2011 நிரந்தர பந்தம் |
Thanks! 🙂
சிரிப்பான் :-) 3:19 முப on ஜனவரி 26, 2011 நிரந்தர பந்தம் |
உங்கள் வலைத்தளம் பார்த்தேன். நிறைய எழுதியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் சொல்லபோவது அமேரிக்கா சிறுகதைகள் எழுதுவது எப்படி என்று இருக்காது என நம்புகிறேன். It’s a good start. Please continue.
சத்யராஜ்குமார் 6:42 பிப on ஜனவரி 27, 2011 நிரந்தர பந்தம் |
Thank you!
டைனோ 8:34 பிப on ஜனவரி 28, 2011 நிரந்தர பந்தம் |
அருமை. சிறுகதை வடிவம் பற்றி நிறைய பேசுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகள்! 😉
சத்யராஜ்குமார் 11:26 பிப on ஜனவரி 28, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி டைனோ!
செந்தில் 12:20 பிப on ஜனவரி 30, 2011 நிரந்தர பந்தம் |
SRK , தாங்களின் அனுபவக் குறிப்புகளக்கு ஆவலுடன் காதிருக்கிறேன். முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ்குமார் 11:29 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் |
நன்றி செந்தில்.