Updates from ஓகஸ்ட், 2011 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 8:55 pm on August 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கிரந்தம்   

    கிரந்தம் தவிர்! 

    சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.

    ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

    ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.

    இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.

    அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.

    நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

    @kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.

    தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.

     
    • TPKD / TBCD (@TPKD_) 10:03 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையான முயற்சி..பாராட்டுகள்…வாழ்த்துகள்.

      இது கிரந்தம் இல்லாத வடமொழிச்சொற்களுக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :-))

    • amas32 10:43 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
      amas32

    • PADMANABAN 11:37 பிப on ஓகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு சத்யா…பெயர்ச் சொல் தவிர மற்ற இடங்களில் கிரந்தம் தவிர்க்கலாம் …. முயற்சி திரு வினையாக்கும்… கிரந்தம் தாண்டி விடலாம் அடுத்து ஆங்கில கலப்புக்கு என்ன செய்வது…..

    • Ravi 12:03 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. நானும் சில சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

    • Balaraman 1:20 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிகவும் நல்ல முயற்சி! 🙂

      இந்தப் பதிவில் கீழ்க்கண்ட சொற்களையும் ‘அடித்து’ நொறுக்கவும்:

      ரசிக்க – விரும்ப
      யோசனைகளை – சிந்தனைகளை

      அப்புறம் ‘பஜ்ஜியோ’ என்பதை ‘பஃச்சியோ’ என்று எழுத ஊக்குவிக்கலாமா?!

      நானும் ‘புல்வெளி’யில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், நன்றி!

    • சத்யராஜ்குமார் 6:08 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman உங்கள் ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    • Kannabiran Ravi Shankar (KRS) 8:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து//

      🙂
      ஓரளவு உண்மையே!
      முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, இயன்ற வரை தவிர்க்க முனைவோம்! இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழியாமல் நிலைக்கும்!

      @ksrk & @raghuji – இந்தப் பணிக்கு என் மிகுந்த நன்றி!

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman – உங்களால் இயன்ற அளவு சொற்களைச் சேருங்கள்! நண்பர்களிடையேயும் அறிமுகம் செய்யுங்கள்!

    • elavasam 9:27 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சிந்தனை என்பதை யோசனை என்ற சொல்லின் மாற்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தனை = thought, யோசனை = suggestion / idea இல்லையா?

      • சத்யராஜ்குமார் 10:07 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        பலராமனின் பின்னூட்டத்துக்குப் பின் மாற்றினேன். யோசனைக்கு உரிய மாற்றுச் சொல் யாரேனும் வழங்க வேண்டும்.

      • Kannabiran Ravi Shankar (KRS) 10:55 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        @elavasam
        யோசனை என்பதே தமிழ்ச் சொல் தான்! – ‘வழாமை ஓடி யோசனை நீண்டு மாலை வேய்ந்து’ என்பது மணிமேகலை!

        யோசிக்கிறேன் = thought! யோசனை சொல்=suggestion! works both ways!
        சிந்தனை= always, thought

      • C.R. Selvakumar 10:07 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

        யோசனை என்பதற்கு ஈடாக கருத்து அல்லது கருத்தூட்டு என்று சொல்லலாம். ஒரு யோசனை வந்தது என்பதை ஒரு கருத்து தோன்றியது என்று சொல்லலாம். ஆ! அது நல்ல யோசனை என்பதை ஆ! அது நல்ல கருத்தாச்சே என்று சொல்லலாம். suggestion என்றால் பரிந்துரை, கருத்தூட்டு என்று சொல்லலாம். யோசனை என்பதையோ அது போன்ற சொற்களை நீக்கவேண்டும் என்பதையோ கருத்தாகக் கொள்ளவேண்டாம் என்பது என் தனிக்கருத்து. வாடிக்கை, அலமாரி முதலான சொற்களும் தமிழ் அல்ல. ஆனால் தமிழாக உள்வாங்கி ஆளலாம். மிக அதிகமாக வேற்றுமொழிச்சொற்கள் பெருகிப் போனால் தான் சிக்கல். ஆனாலும் ஈடான தமிழ்ச்சொற்களை ஆங்காங்கே ஆள்வதும் நல்லது. புனை கதைகள் வேறு கட்டுரை, புனைவிலா எழுத்துகள் வேறு.

    • ila 9:46 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமையான முயற்சிங்க. சில வார்த்தைகளை சொற்களை இணைத்துள்ளேன். அதே மாதிரி அதை நிர்வகிக்கவும் ஒரு குழு அமைச்சிருங்க. டேமிளர்ஸ் ஆர் சோ கன்னிங் பெல்லோஸ் யூ நோ..

    • seenu 11:02 முப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நன்றியுடன்
      சீனு

    • இரா. செல்வராசு 6:57 பிப on ஓகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. தள வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

    • REKHA RAGHAVAN 5:07 முப on ஓகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    • Bar-Code 11:55 முப on ஓகஸ்ட் 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சத்யா

    • blog.indian 1:25 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      திரு. இராம.கி அவர்களின் வளவு பதிவில் உள்ள சொல்லாக்கங்களின் தொகுப்பு.

      http://thamizhchol.blogspot.com/

      • Kannabiran Ravi Shankar (KRS) 8:36 பிப on திசெம்பர் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        மிக்க நன்றி; இராம.கி ஐயாவின் செஞ்சொல்லாக்கங்களின் நனி மகிழ்நன் நான்! அவரை அறிந்தவனும் ஆதலால்…இத்தளம் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்!

    • blog.indian 1:29 பிப on திசெம்பர் 4, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஹஸ்தம் = கைத்த(ல)ம் 

      சுவாரஸ்யம் = சுவையாரம் 

      புஸ்தகம் = பொத்தகம்

      ஜோடி = சோடி

    • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..நானும் கிரந்த சொற்களை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க முயல்வேன்.

    • Krishnan 11:56 பிப on நவம்பர் 13, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Reblogged this on My Perspectives and commented:
      கிரந்தம் தவிர்.

    • C.R. Selvakumar 10:09 முப on நவம்பர் 27, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிக நல்ல முயற்சி! நல்வாழ்த்துகள்!

  • மீனாட்சி சுந்தரம் 12:00 am on August 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: ஃபைன், இன்ஸ்பெக்டர், ஊழல், , பள்ளி, , பைக், போலீஸ், மாணவர்கள்   

    சட்டங்களும் நஷ்டங்களும் 

    காலங்கார்த்தாலே போலீஸிடம் மாட்டுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

    அன்று காலையில் கிளம்பும் போதே பயங்கர லேட்டாய்த்தான் கிளம்பினேன். பைக்கில் பறந்தடித்துச் சென்றாலும் கவுண்டம் பாளையத்திலிருந்து சரவணம் பட்டிக்கு இருபது நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குள் கண்டிப்பாய் கார்ட் பஞ்ச் பண்ண முடியாது என்று தெரிந்தும், ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தேன். ஜி.என்.மில்ஸ் தாண்டி ரயில்வே க்ராஸிங் தாண்டும் போது பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருந்த இரண்டு சிறுவர்கள் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டினார்கள்.

    நிற்க நேரமில்லாமல் வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்த நான், பள்ளிச் சிறுவர்கள் என்றதும் பிரேக்கை மிதித்தேன். பார்த்ததுமே தெரிந்தது. அண்ணன்-தம்பி… அண்ணன் ஏழாம் கிளாஸும் தம்பி ஆறாம் கிளாஸும் படிக்கிறார்களாம்.

    பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாலும், மிக லேட்டாகி விட்டதாலும் கொஞ்சம் அவசரமாய் வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விட்டால் போதும் என கெஞ்சும் நிலையில் கேட்டுக் கொள்ளவே பைக்கில் இருவரையும் உட்காரச் சொல்லி திராட்டிலைத் திருகினேன்.

    மூன்று நிமிடம் இருக்கும். அடுத்த க்ராஸிங்கைக் கடக்கும் சமயத்தில் அந்த ட்ராஃபிக் போலீஸ் ஸ்குவாட் விசிலடித்துக் கூப்பிட்டதை சத்தியமாய் நான் கவனிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு கான்ஸ்டபிள் எங்களை விரட்டி மடக்கி வண்டிச் சாவியைப் பறித்தபோது, அரை கிலோமீட்டர் தாண்டியிருந்தேன். “வண்டியைத் தள்ளிட்டு வாப்பா. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு. மூணு பேரும் வாங்க..!” சொல்லியபடியே தான் வந்த வண்டியைத் திருப்பினார் கான்ஸ்டபிள்.

    கடுப்புடன் திரும்பி நான் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, “ஸாரிண்ணா..!” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்தபடி வந்தாலும், சிறுவர்களின் முகத்தில் பள்ளிக்கு லேட்டாவதின் பயம் தெரிந்தது.

    வண்டியைத் தள்ளியபடி அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு டெர்ரரிஸ்ட்டைப் பிடித்த பெருமையுடன் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரொம்பக் கறாராய்,

    “ட்ரிபிள்ஸ். நிக்காமப் போனா விட்டுடுவமா.? பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா..!”.

    ஒரு உதவி செய்யப் போய் அலுவலகத்துக்கு லேட்டாவதுடன், அறுநூறு ரூபாய் தண்டம் வேறு. நான் திரும்பி கோபமாய் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, அதில் பெரியவன் தைரியமாய் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

    “சார் இந்த அண்ணன் மேல ஒண்ணும் தப்பு இல்ல சார்… நாங்கதான்.! அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்..!”.

    அந்த இன்ஸ்பெக்டர் திரும்பி, “தம்பி சும்மா இரு. ஃபைன வண்டிய ஓட்டினவங்கதான் கட்டப் போறாங்க. உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.!” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே.! யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி.? வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன்.!”.

    அத்தனை பேர் முன்னால் அவமானப்பட்ட வலியுடன் கண்கள் கலங்க அவன் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவனை ஏதும் பேச வேண்டாம் என சைகை செய்துவிட்டுக் காத்திருந்தேன். அதற்கப்புறம், மேலும் பத்து நிமிடம். இருநூறு ரூபாயில் பேரம் முடிந்து. அதே சிறுவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, இனி வாழ்க்கையில் எவனுக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

    இந்தப் பதிவின் நோக்கம் ட்ரிபிள்ஸ் போகாதே, போலீஸ் ஊழல், உதவி செய்யாதே என்று எதுவும் சொல்வது அல்ல. ஐந்தாவது நிமிடம் அந்தச் சிறுவர்களை வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விடும்போது நடந்ததுதான் நான் சொல்ல வந்தது.

    வண்டியை விட்டு இறங்கியதும், “பார்த்து போங்கப்பா..!” என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலரேட்டரை முறுக்க எத்தனித்த போது அந்த ஏழாம் வகுப்புப் பெரியவன் கூப்பிட்டான்.

    “அண்ணா..!”

    “என்ன.?” என்பது போல் நான் திரும்பிப் பார்த்ததும் அவன் தொடர்ந்தான்.

    “சாரிண்ணா… இப்பிடி ஆகும்னு தெரியலைண்ணா. எங்களால உங்களுக்கு இருநூறு ரூபா நஷ்டம். அண்ணா… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. நாங்க ஸ்கூலுக்கு வந்திட்டு போக எங்க அப்பா கொடுத்த இருபது ரூபா இருக்குண்ணா. இத நீங்க வாங்கிக்கணும்..!” என்றவன் நீட்டிய கையில் இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

     
    • kullabuji 7:07 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மிகவும் வ௫த்தமளிக்கிறது.

    • தகடு 7:07 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்லாருக்கு…

    • காஞ்சி ரகுராம் 8:01 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மாணவர்களின் கள்ளமற்ற மனதைக் காட்டிய பதிவு.

      நேற்று மூன்று மாணவர்கள் லிஃப்ட் கேட்டனர். மூவரையும் எப்படி ஏற்றிச் செல்வது?! இருவரை ஏற்றிக் கொண்டு ஒருவனை தனிந்து விடுவதும் சரியாக இருக்காதே என நினைத்தபடியே வண்டியை நிறுத்தினேன். என் யோசனை களைவதற்குள்ளேயே ஒருவன் என் கைகளினிடையே நுழைந்து முன்னால் ஏறிக் கொள்ள, மற்ற இருவரும் குதிரை மீது ஏறுவது போல் தாவி என்னை கட்டிக் கொண்டு, “போலாணா, ரைட்.. ரைட்.. ” என்று சொல்ல, அவர்களின் பிஞ்சு மனதை நினைத்து புன்னகைத்தபடியே பள்ளியில் இறக்கி விட்டேன். என்ன ஒன்று, போலிஸ் இருக்கும் இடங்களை ஜாக்கிரதையாக தவிர்க்க வேண்டியிருந்தது.

      இம்மாணவர்களின் மனசு சில போலிஸ்-க்கு இருந்தாலே உதவிகள் நீளும்.

    • chinnapiyan v.krishnakumar 8:02 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கொடூரத்திலும் கொடூரம். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

    • sri 10:31 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நெஞ்சம் நெகிழ்கிறது இது போன்ற பொறுப்பான இளம் மாணவர்கள் இருப்பதை அறியும்போது!

    • Anand Raj 10:56 முப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      காவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.

    • David Jebaraj 12:06 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      எனக்கும் இது போல் ஒரு சம்பவம். அவசரமாய் போய்கொண்டிருக்கையில் (உச்சி வெயில் நேரம், மாணவர்கள் தேர்வு நேரம்) அவசர அவசரமாய் காலில் செருப்பு இல்லாமல் போய்கொண்டிருந்த சிறுவனை நானே அழைத்து பைக்கில் அமர்த்தி போனேன். பள்ளியில் இறக்கி விடும் சமயம், ‘ஏம்பா உங்கப்பாட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கி போடலாமில்லே’ என்று கேட்டவுடன் ‘அண்ணே எங்கப்பா (சமீபத்தில் நடந்த, நாங்கள் அறிந்த, கோரமான) ஒரு ஆக்சிடண்ட்ல இறந்துட்டாருண்ணே’ என்றான். அவர் ஒரு ஆசிரியரும் கூட. சட்டென்று மனம் பதைக்க நான் ‘தம்பி என்கூட வா. நான் உனக்கு செருப்பு வாங்கி தாரேன்’ என்று கூப்பிட்டேன். அதற்கு அவன் ‘வேண்டாண்ணே. எங்கம்மா யார்ட்டேயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க. தேங்ஸ்னே’ என்றபடியே நிழல் நிழலாக தாவி பள்ளி உள்ளே ஓடி மறைந்தான். நான் அவன் போன பின்பும் சிறிது நேரம் வெறித்து பார்த்தபடியே அங்கே நின்று விட்டு கிளம்பினேன். மனதில் ‘கொள்ளென கொடுத்தல் உயர்ந்தன்று… கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று’ என்ற செய்யுள் ஓடியது…

    • asksukumar 12:35 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      யதார்த்தம் இப்படித் தான் இருக்குங்க! அந்த தம்பிங்க காலத்துலயாவது இது மாறனும்!

    • Sakthivel 12:44 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வருத்தமளிக்கிறது. வருத்தபடாதீர், ஓர் அனுபவம்.

      சென்னை தேவலாம், நன்றாக பேரம் பேசினால் கடைசியில்
      ” மொத போனி டீ செலவுக்காசும் கொடுத்துட்டு போப்பா” னு முடிப்பாங்க.

    • லாரிக்காரன் 11:15 பிப on ஓகஸ்ட் 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இருநூறு ரூபாயில் நீங்கள் இந்தியாவை நொந்தபோது இருபது ரூபாயில் இளைய தலைமுறை ந்ம்பிக்கையூட்டியது சமூகம் கண்டிப்பாக மாறும் இது போல் இளையவர்களால்

    • கோமாளி செல்வா 1:32 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கடைசில அந்தப் பையன் சொன்னது உண்மைலயே ரொம்ப சிலிர்ப்பா இருக்குனா.. ரொம்ப அருமையான பதிவு 🙂

    • பாலா 1:41 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வருத்தமே… போக்குவரத்து காவலர் சிறுவர்களிடம் பேசிய முறை தவறெனப்படுகிறது.. காவலர்கள் மீதான அந்தச் சிறுவர்களின் பிம்பம் எப்படியும் மாசுபட்டிருக்கும்..

    • Mohan 6:29 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Super Boss.. Nalla paarunga antha paiyan naan than…

    • anand 9:53 முப on ஓகஸ்ட் 10, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Sir

      Please make this page as print out and send to all Police staion and Coimbatore commisoner office including Traffic department head office. All police men should read it and they should relaise this.

      Hope you can understand my request.

      Regards
      Anand
      Pollachi

    • Ramesh 4:56 முப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      காவலர்களின் கடமையை விட.. சிறுவர்களின் “நம்மால் தானே” என்ற கவலை.., இன்னுமும் “பொறுப்பான இளைய தலை முறை” இருக்கிறதே என நிம்மதி பெருமூச்சு கொள்ளவைத்தது.

    • Elango 9:10 முப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      குழந்தைகள் மனது தான் எவ்வளவு உயர்ந்தது.

    • Tharique Azeez | உதய தாரகை 8:16 பிப on ஓகஸ்ட் 11, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உள்ளத்தை நெகிழ வைத்த உணர்ச்சிபூர்வமான கட்டம், அந்தப் பையன் ஈற்றில் சொன்ன விடயம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    • கோளாறு 12:10 பிப on ஓகஸ்ட் 13, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சட்டம் சாமானியர்களிடம் தன் கடமையை (???) செய்யும்,கை குழந்தையிடமும் கையூட்டு கேட்பார்கள்.யதார்த்தமான பதிவு தலைவரே.. வழிப்பறி கொள்ளையர்களை பற்றியும் வஞ்சமில்லா சிறார்கள் பற்றியும் !!!

    • amas32 12:23 பிப on ஓகஸ்ட் 13, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இது போன்ற பதிவுகள் தாம் மனித நேயத்தையும், அன்பின் ஆழத்தையும் காட்டுகின்றன. போலிஸ்காரர் செய்யும் தவறு நாம் எப்பொழுதும் பார்ப்பது தான் ஆனால் நீங்கள் செய்ததும் அந்த சிறுவன் செய்ததும் பெருமைக்குரியவை. நல்லப் பதிவு!
      amas32

    • sarbudeen 10:59 முப on ஓகஸ்ட் 14, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Antha siruvarkalin elakiya manathu ennai rombaum nehilach seithathu

    • sss.cbe 9:47 முப on ஓகஸ்ட் 15, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      தல இதைத்தான் கலாம் சொன்னாரு!உங்க டோனி எங்க ப்ரானு எல்லாம் பார்த்துக்குவங்க! நோ கவலைஸ், நாம அவங்களுக்கு வேல்யூஸ் சொல்லிக்கடுத்தா போதும்

    • தினேஷ் குமார் 11:43 முப on ஓகஸ்ட் 22, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ம்ம்ம்..

      இந்தச் சிறுவர்கள் இளைஞர்களாவதற்குள் இந்தச் சமுதாயம் அவர்களையும் கெடுத்து வைத்திருக்குமே என்றெண்ணும்போது இன்னும் வருத்தமாயிருக்கிறது.

    • ganesan 11:28 முப on பிப்ரவரி 21, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      போலிஸ்காரர் செய்யும் தவறு மிகவும் வ௫த்தமளிக்கிறது.

    • Sara Durai 10:35 முப on ஜூன் 6, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நேரத்துக்கு பேருந்து விட்டா ஏன் ட்ரிபுள்ஸ் ,ஓவர்ஸ்பீடெல்லாம்

    • Azhagan 12:13 முப on ஓகஸ்ட் 7, 2013 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அவர்கள் சிறுவர்கள் அல்ல: நம்பிக்கையூட்டும் எதிர்கால இந்திய இளைஞர்கள்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி