நீல நயனங்கள்
லைப்ரரியில் ஒரு சிறுவர் நிகழ்ச்சிக்காக மகளைக் கூட்டிச் சென்றிருந்தேன். அவள் பள்ளித் தோழியும் வந்திருந்தாள். இருவரும் பேசி விளையாட வசதியாய்த் தோழியின் அம்மா என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“உன் பெண்ணின் நீல நயனங்கள் மிக அழகு.” என்று சொன்னேன்.
“ரொம்ப நன்றி. எங்கள் குடும்பத்திலோ, கணவனின் குடும்பத்திலோ யாருக்கும் இப்படி நீலக் கண்கள் இல்லை. அதனாலேயே எனக்கும் அவளுடைய நீலக்கண்கள் ரொம்பப் பிடிக்கும்.”
“ஓ, இறைவனின் அதிசயம்தான். உன் தலைமுறைச் சங்கிலியில் எங்காவது யாருக்காவது நீலக் கண்கள் இல்லாமலிருந்திருக்காது.” என்றேன்.
அவள் மறுத்தாள். “இல்லை, கருமுட்டையை தானமாகப் பெற்று இவளைப் பெற்றேன்.” உதட்டில் பளிச்சென்று புன்னகை நிறைந்திருந்தது.
அவள் பூர்வீகம் என்ன என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இதையெல்லாம் ஒரு சிறுகதையாக எழுதும் எண்ணமும் எனக்கு இல்லை.
சித்ரன் ரகுநாத் 11:27 பிப on ஜனவரி 17, 2015 நிரந்தர பந்தம் |
எழுதியிருக்கலாமே..