Updates from மார்ச், 2016 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 8:53 am on March 5, 2016 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    அழுத்தம் 

    ஏழாவது படிக்கும் லதிகாவை பிரின்சிபால் அழைப்பதாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது.

    அமெரிக்க பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் எல்லாம் இல்லை. பிரின்சிபால்தான்.

    திடீரென்று ஆஃபிஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டால் பெரும்பாலும்ஏதேனும் பிரச்சனையாகவே இருக்க முடியும்.

    கதவருகே நின்று, “ஹலோ மிஸ்டர் கென், மே ஐ கமின்?” என்கிறாள் லதிகா. முதல்வரானாலும் சரி, ஜனாதிபதியானாலும் சரி சின்னக் குழந்தை கூட பேர் சொல்லிக் கூப்பிடுவதே வழக்கம்.

    “உள்ளே வா லதிகா. சிட் டவுன்.”

    counsஅவர் முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்து லதிகாவுக்குள் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனால் அவருக்கு பக்கவாட்டில் ஸ்கூல் கைடன்ஸ் கவுன்சிலர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாய்த் துணுக்குறவே செய்தாள் லதிகா.

    “ஹவ் ஆர் யூ டூயிங்?” என்றார் பிரின்சிபால்.

    “ஐயாம் குட். தாங்க்ஸ் மிஸ்டர் கென்.”

    கைடன்ஸ் கவுன்சிலர் பெண்மணி அவளை உற்றுப் பார்த்து, “ஈஸ் எவெரிதிங் ஆல்ரைட்?” என்று கேட்டார்.

    “எஸ். ஆல்ரைட் மிஸஸ். அமெண்டா.” – லதிகா குழப்பத்துடனே பதில் அளித்தாள்.

    “ஹவ் ஆர் யூ ஃபீலிங்? ஆர் யூ நார்மல்?”

    “எஸ் ஐயாம் நார்மல்.”

    “நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம். எதுவானாலும் நீ எங்களிடம் வந்து கலந்து பேசலாம்.”

    லதிகாவின் குழப்பம் உச்சத்துக்குப் போனது.

    “ஷ்யூர். ஐ வில் டூ.”

    “உன் பேரன்ட்ஸ் ரொம்ப மிரட்டுகிறார்களா?”

    “வாட்?”

    “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை.” என்றார் கவுன்சிலர்.

    வாஷிங்டன் டி.சி பகுதியில் டி.ஜே ஹை ஸ்கூல் ரொம்ப பிரபலம். ஸ்கூல் பிராஜெக்ட்டாக ஸாட்டிலைட் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகள் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தச் சிறப்புப் பள்ளிக்கு மட்டும் வசிக்குமிடம் முக்கியமில்லை; நுழைவுத் தேர்வு வைத்தே மாணவர் தேர்வு செய்வார்கள். அதற்குக் கடும் போட்டி இருக்கும். போட்டி என்றால் இந்திய, சீன பெற்றோர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. இயல்பாகவே திறமை மிகுதியான குழந்தைகளுக்கு அதிகபட்ச சவால்கள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு தீவிர கோச்சிங், நிறைய மன அழுத்தம் கொடுத்து பூனைகளுக்கு புலி போல சூடு போட்டு அனுப்பும் வேலைகள் நிறைய நடந்து வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே.

    கவுன்சிலர் தொடர்ந்து பேசினார். “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை. அதற்காக தற்கொலை என்ற சிந்தனை எல்லாம் தவறு. அதற்காக என்றில்லை, எதற்காகவும். உன்னுடைய பெற்றோரைக் கூப்பிட்டு நாங்கள் பேசுகிறோம். நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எது முடியுமோ, எது நன்றாக வருமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். ”

    லதிகா ரொம்பவே திடுக்கிட்டுப் போனாள். “மிஸ்டர் கென் அண்ட் மிஸஸ் அமெண்டா, என் பெற்றோர் என்னை எதுவும் சொல்வதில்லை. தற்கொலை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை.”

    இப்போது அவர்களும் குழம்பிப் போனார்கள். யாருக்கோ ஃபோன் போட்டார்கள். லதிகாவைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார்கள். உண்மையில் இன்னொரு பெற்றோர் அந்த ஹைஸ்கூலில் சேர தங்கள் பெண்ணுக்கு உச்சபட்ச மன அழுத்தம் தந்ததில் அந்தப் பெண் தற்கொலை செய்யலாம் போல இருப்பதாக நண்பனிடம் சொல்ல, நண்பன் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அந்த அம்மாவோ PTA (Parents Teacher Association) தலைவி. உடனே பள்ளிக்குத் தகவல் தந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் திலகா. திலகா – லதிகா இந்தியப் பெயர் குழப்பத்தில் திலகாவுக்கு பதிலாக லதிகாவைக் கூப்பிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

    இப்போது மேற்படி உரையாடலை மறுபடியும் படித்து சிரியுங்கள். அமெரிக்கா வந்த பிறகும் பிள்ளைகளுக்கு தேவையற்ற மன அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் சில இந்தியப் பெற்றோர்களை நினைத்து வருந்தவும் செய்யுங்கள்.

    – சத்யராஜ்குமார்

     
  • சத்யராஜ்குமார் 7:53 pm on February 13, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    காதலர் தினம் aka Valentine’s day 

    நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளரும், நிறுவனருமான திரு. ஆனந்த் முருகானந்தம் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கிறேன். அவர் வேதியியல் ஆய்வாளர் என்றாலும், தமிழ் இலக்கியத்தின் மேல் தீராக் காதல் கொண்டு அலசி ஆய்ந்து வருபவர். பறவைகளை நேசிப்பவர். அவர் வீட்டுக்குப் போனால் புஷ்நெல் பினாகுலர் எடுத்து வைத்து, பின் கட்டுத் தோட்டத்தை நோக்கி நான் உட்கார்ந்து விடுவேன். மரங்களடர்ந்த தோட்டம் பறவைகள் சரணாலயம்.

    அவருடைய மின்னஞ்சல்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. ஒரு புதுப் பார்வை தாங்கி வருபவை. இந்த வேலண்ட்டைன்ஸ் டே-யை ஒட்டி அவர் அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே கீழே தந்துள்ளேன்.

    காதலர் தின வாழ்த்துகள்!

     

    When Valentine Day is taken positively, it describes true love between partners. On this day, it is interesting to think about  a bird called “Andril” in Tamil. According to classical literature, it is believed that the male and female Andril birds live together for long time; for a life time. Which bird is it? Can we see it today? Yes,  but there are at least three species mentioned in the internet.
    1. Demoiselle Crane:
    In Rajasthan the bird is called Koonj. It is derived from Kraunch (sanskrit). There is a legend connecting Kraunch bird to Valmiki and origin of Ramayana. The bird is described in wikipedia-

    It is called “saras” in Hindi. In Gujarat, in some communities, newly wed couple are asked to see a pair of these birds as  part of their marriage ritual. The birds migrate in large number to Bharatpur Sanctuary in Rajasthan.

    There is an interesting video of the dance of this bird to attract the partner!
    3. Ibis:
    There are references in Tamil calling Ibis or Glossy Ibis(Vellai or Karuppu Arival Mookkan) as Andril.
    The wikipedia reference-
    The references in Tamil-
    So which one is really the Andril?  We may have to do some  research by studying  the behavior described in Tamil literature and compare with the ornithological data. Nevertheless it appears to be an apt bird for the occasion.
    – Anand Muruganandam, NJ
     
  • சத்யராஜ்குமார் 12:07 am on January 31, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    மூன்றாம் காதல் – Beta Version 

    என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு என் தொழில் நுட்பக் காதல் நன்றாகவே தெரியும்.

    தமிழில் முதல் முதலாக ஒரு மொபைல் மின்னூல் கொண்டு வந்து ஐஃபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆப் ஸ்டோரில் வெளியிட்டதும் தெரியும். இதில் முக்கியமான விஷயம் அப்போது அந்த ஃபோன்களில் தமிழ் எழுத்துருவுக்கான சப்போர்ட் வந்திருக்கவில்லை. இப்போதும் அமேசான் கிண்டிலில் தமிழ் சப்போர்ட் இல்லை. இருந்த போதிலும் திக்குமுக்காடி ஒரு தமிழ்ப் புத்தகத்தை அதில் பதிப்பித்திருக்கிறேன். ஆப்பிள் ஐ-புக்கிலும் அமெரிக்க பின்னணியிலான இருபது சிறுகதைகள் கொண்ட அதே புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.

    போன வாரம் எழுத்தாளர் @nchokkan கூகிள் புக்ஸ் பற்றி எழுதி என் கவனத்தைக் கவர்ந்தார். துகள்கள் சிறுகதைத் தொகுப்பை சோதனை ஓட்டமாக அதில் வெளியிட்டுப் பார்த்தேன். சுய பதிப்புக்கு இந்த பிளாட்பார்ம் மிக இலகுவாக இருப்பதாக உணர்கிறேன்.

    ஒரு காலத்தில் பிரபல வார இதழ்களில் சிறுகதைகள் எழுதுவதோடல்லாமல், பொழுதுபோக்கு நாவல்களும் எழுதிக் குவித்து வந்தேன். மாலைமதி, மோனா உட்பட ஏராளமான மாத இதழ்கள் தொடர்ந்து என் கதைகளை விரும்பி வெளியிட்டு வந்ததே அதற்கு முக்கிய காரணம். டி.வி தொடர்கள் பிரபலமடையத் துவங்கியபோது மாத நாவல்களுக்கு ஒரு தேக்கம் வந்தது. அதே சமயம் நான் அமெரிக்கா வந்து விட்டேன்.

    3rd-loveஎப்படி சிறுகதைக்கென்று ஒரு கிக் இருக்கிறதோ அதே போல் இது போன்ற பொழுது போக்குக் கதைகளில் ஒரு கட்டுரையாக வறட்சி தட்டும்  விஷயங்களைக் கூட மிக எளிதாக வாசகருக்குக் கடத்தி விட முடியும் சௌகரியம் இருக்கிறது. ஒரு குற்றமும், அதற்கான தீர்வுமே பெரும்பாலான கதைகளின் மையக் கருவாக இருந்தாலும், ஒவ்வொரு கதையிலும் வரும் விதவிதமான கதாபாத்திரங்கள், பாத்திரச் சூழல்கள் கதையின் பரிமாணத்தை மாற்றிக் காட்டுகின்றன.

    கூகிள் புக்ஸ் என்னை அப்படிப்பட்ட கதைகளை மீண்டும் எழுதேன் என்கிறது.

    எதையோ தேடப் போய் என் இணைய தளத்தில் தடுக்கி விழுந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் முற்றிலும் புதிய வாசகர்களும் அவ்வப்போது எதையாவது எழுதினால்தான் என்ன என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தபடி இருக்கிறார்கள்.

    ஆகவே, “மூன்றாம் காதல் ” என்று ஒரு பொழுது போக்கு நாவல் எழுத உத்தேசித்திருக்கிறேன். வாஷிங்டன் டி.சி வாழ்க்கைக்கென்றே சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிற பகுதிகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கே கூட பரிச்சயமற்றவையாக இருப்பதை அறிந்து வியந்ததுண்டு. இந்த வட்டார வாழ்க்கையே கதையின் களம். அந்த வகையில் இதை ஓர் அமெரிக்காவின் வட்டார நாவல் எனக் கொள்ளலாம். எதைப் படித்தாலும் அதில் ஆன்ம தரிசனம் தேடும் போக்கு இணையத்தில் தற்சமயம் இருப்பதால் அதெல்லாம் இங்கே கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ஆனால் இந்த முறை ஒரு புதிய அணுகுமுறையை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். அதாவது நாவலை கூகிள் புக்ஸில் பதிப்பிப்பதற்கு முன்னதாக Beta Version-ல் வாசகர்களைப் பங்கு பெறச் செய்து பார்க்கலாமே என்று எண்ணுகிறேன்.  விருப்பமுள்ளவர்கள் srk.writes at gmail.com என்ற முகவரிக்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version என்று சப்ஜெக்ட்டில் போட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். அல்லது @ksrk -க்கு Subscribe me to “மூன்றாம் காதல் ” Beta version எனக் குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சலை DM செய்யுங்கள். அத்தியாயங்கள் நான் எழுத எழுத சுடச் சுட உங்களை வந்து சேரும். அத்தியாயங்கள் குறித்து நீங்கள் ஆக்கபூர்வமான கருத்துகள் சொன்னால், குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டினால், அவைகள் எனக்கு ஏற்புடையவையாக இருந்தால், அதன்படி கதை மாற்றியமைக்கப்படும். இறுதிப் புத்தகத்தில் ஏற்கத்தக்க ஆலோசனை அளித்தவர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்வேன்.

    மொத்தத்தில் இது ஒரு சோதனை முயற்சி. கால வரையறை எதையும் தீர்மானிக்கவில்லை. வாரம் ஓர் அத்தியாயம் எழுதக் கூடும். என்னுடைய நேரமும், உங்களுடைய வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளதென்பதைப் பொறுத்து இந்த ப்ராஜெக்ட் இனிதே நிறைவு பெறும் அல்லது நிறைவு பெறாமலே போனாலும் போகும். 🙂

    This project is on hold now. Sorry about that! 😦

     

     

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி