வடிவேலகராதி
2050-ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் முனைவர் பேராசிரியர் ஆ.கா. தமிழ்ச்செங்கோட்டுவரியன் அவர்கள் வாசித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
———————————————–
….தமிழில் வடிவேலகராதி என்று ஒன்றைக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு புதிய சொற்றொடர்களும், வார்த்தைகளும் இனிய தமிழில் அக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பது காணவும் கேட்கவும் கிடைக்கின்றன. சினிமா என்ற ஒன்று இதற்கென மெனக்கெட்டு தன்னாலான சிறு பங்கை ஆற்றிக்கொண்டிருந்தது என்பது தற்கால அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ”உதாரணத்திற்கு இஸ்.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்கிற ஒரு சொற்றொடர். இதுவரை நிகழ்ந்த நிகழ்வுக்கே கண்கள் சோர்ந்து ஒருவித மயக்க நிலையை உடலானது அடையத் தொடங்கிவிட்டபோது இனிவரும் நிகழ்வுகளை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் என்று பொருள்பட அமைந்த இந்த வாக்கியம் வடிவேலடிகளாரால் 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
வெற்றியாளன் என்ற அர்த்தம் கொண்ட தலைப்புடன் வந்த ஒரு சீரிய திரைப்படத்தில்தான் இவர் மிகவும் பரவலான புகழடைந்தாரென்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பேச்சுத்தமிழில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர் இவர். திரைப்படங்களில் இவர் கோலோச்சி வந்த காலகட்டத்தில் இவர் பேசின வசனங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது மட்டுமல்லாமல் அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாடப் புழக்கத்திலும் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன.
இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில்கூட ஊழியர்களிடையே இவை பரவலான சொல்லாடல்களாக இன்றும் காணப்படுகின்றன. உதாரணம் “நீ இதுவரை பணிபுரிந்ததுபோதும். இனிமேல் நீ வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை” என்று பொருள்பட சொல்லப்படும் வாக்கியம் “ஆணியே புடுங்க வேண்டாம்..”. ஓரிரு வார்த்தைகளிலேயே சுருக்கமாக பல அர்த்தங்களை இது விளக்கிவிடுகிறது என்ற வகையில் இதை ஒரு மிக முக்கியமான பேச்சு வழக்குப்பிரயோகமாகக் கொள்ளலாம்.
இது மாதிரி கமல்ஹாசன் என்கிற நடிகர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் ”என்ன வூட்ல சொல்ட்டு வந்தியா” என்று பேசப்படுகிற வசனமானது “சாலையில் கவனமாகப் போகவில்லையெனில் கார் போன்ற வாகனத்தில் அடிபட்டு பரலோக பதவி அடைந்துவிட நேரிடும்” என்கிற எச்சரிக்கையை மறைமுகமாகச் சொல்வதுடன் “போய்வருகிறேன். நான் இனி திரும்பி வரமாட்டேன்” என்று சம்பந்தப்பட்டவர் வீட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்து அதற்கேற்ப சாலைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடந்துகொள்கிறார் என்பதையும் மிக அழகாக எடுத்தியம்புகிறது. இவ்வகையில் இது தமிழின் அழியாப் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகவும் நிலைபெற்றுவிட்டதென்றே சொல்லலாம்.
இது போன்ற சொலவடைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போனால் ஒரு ஆயிரம் பக்க ஆய்வுக்கட்டுரையாகத்தான் அதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுதல் நலம் என்று தோன்றுகிறது.
‘ஒய் பிளட்? சேம் பிளட்’ என்கிற ஒன்று தனக்கேற்பட்ட அவமானகர கதிநிலை மற்றவருக்கும் ஏற்பட்டத்தை அறிந்து சந்தோஷம் கொள்ளும் மனப்பான்மையை எடுத்துச் சொல்கிற மிக எளிய வாக்கியம். இதில் ஆங்கில மொழியானது தாறுமாறாக சிதைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தாலும் தமிழின் மிக முக்கிய வாக்கிய இணைப்புகளில் தலையானதாகக் கருதலாம்.
இதே போல் ‘முடியல’ என்கிற வார்த்தை, சூழலையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து அவரவர் வேவ்வேறு பொருள்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான வார்த்தையாகும்.
வடிவேலழகர் தவிர கவுண்டமணியார் என்கிறவரும் இதேபோல் புதிய அர்த்தங்களுடன் கூடிய தமிழ்ச் சொற்றொடர்களை தமிழுக்கு வழங்கியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். இவர் உருவாக்கின ”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற வாக்கியம் பொது இடங்களில் பிறர் முன்னிலையில் தன் கையாலாகத்தனம் தெரிந்து கேவலமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டாலும்கூட அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மித மிஞ்சிய நகைப்புடன் இந்த வாக்கியத்தை நீட்டி முழக்கி உச்சரிப்பதன் மூலம் அந்நிலையை சமாளித்துவிட முடியுமென்கிற வலையில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த வாக்கியம் இன்னும் சில நூற்றாண்டுகளாவது தமிழில் வழக்கத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இவர் உருவாக்கின மற்ற சில அரிய சொற்றொடர்கள் ‘கொசுத்தொல்ல தாங்க முடியல’ என்பதும் ‘ஸ்டார்ட் த மீஜிக்” என்பதும்.
இதுபோல் தமிழில் இப்போதைய வாழ்க்கை நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் அரிய தமிழ் வாக்கியங்கள் சில:
1. எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்
2. ஏன் இந்தக் கொலவெறி?
3. என்ன கொடும சரவணா இது?
4. வந்துட்டான்யா வந்துட்டான்யா..
5. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டற மாதிரி
6. இப்புடுச் சூடு
7. வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்..
8. வரும்ம்ம்.. ஆனா.. வராது..
9. பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் வீக்கு.
10. அது போன மாசம். இது இந்த மாசம்.
11. ஐயோ வட போச்சே..
12. என்ன வெச்சு காமெடி கீமடி எதும் பண்ணலையே..
சொல்ல வருகிற விஷயத்தை மறைமுகமாகவோ நேராகவோ மிக எளிய முறையில் சொல்வதற்கு உதவுகின்றன என்பதனால் செம்மொழியாம் தமிழ்மொழியில் இந்த வாக்கியப் பிரயோகங்கள் வரலாறுகள் தாண்டி நீடித்து நிலைத்திருக்கும் என்று மொழி ஆராச்சியாளர்கள் கருதுவதுடன் மேலும் இதுபோன்றவைகளை அதிக அளவில் திரைப்பட மின்தகடுகளிலிருந்து மக்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் இவைகளை செவ்வனே பின்பற்றுவோமாக….
ஆயில்யன் 10:59 முப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்க போச்சு :)))
ஆயில்யன் 11:02 முப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
ரன்னிங்க்லயே திங்க் பண்ணி பொழைச்சுப்போம்லன்னு – வேல் படத்தில
ராஜூ 11:08 முப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
\\3. என்ன கொடும சரவணா இது?\\
இது வடிவேலு கிடையாதே..! பிரபு.
முத்துகுமார் 11:12 முப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
வடிவேலுவின் சொல்லகராதி குழந்தைகள் முதல் பெரியவர் வரை, எல்லாரும் ரசிக்கும்படி இருந்தாலும், விவஸ்தையின்றி சில நேரங்களில் பொது இடங்களில் உச்சரிக்கபடுவது, கொஞ்சம் எரிச்சலூட்டும் சங்கதிதான்..
ஆயில்யன் 11:50 முப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
//இப்புடுச் சூடு//இது தலைவர் டயலாக் ஆச்சே! 🙂
சித்ரன் 12:32 பிப on ஜூன் 13, 2010 நிரந்தர பந்தம் |
@ஆயில்யன் @ராஜூ : நன்றி! தலைப்பு வடிவேலுவுக்காக இருந்தாலும் உள்ளே கமல்ஹாசன், கவுண்டமணியார் எல்லோரும்தான் வருகிறார்கள். பட்டியலிடப்பட்ட டயலாக்குகளை பொதுவானவையாகக் கருதவும்.
kannan 7:02 முப on ஜூன் 14, 2010 நிரந்தர பந்தம் |
superb
Chandrasekkar 6:31 முப on ஜூன் 15, 2010 நிரந்தர பந்தம் |
yaaravathu ungala “romba nallavannu” sonnaangala?
Dass 1:08 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் |
Entha oru visathayum “blan pannanum” intha blogum blan pannithaan ezhuthaneengala…